நிலைபெறநீ வாழியவே! ஆக்கம்: கவிஞர் சீனி நைனா முகம்மதுஇசை: ஆர்.பி.எஸ்.ராஜூகுரல்: துருவன், பாபு லோகநாதன் காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே! கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே! தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில் இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும் பொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம் வருபவளே! செவ்வியலின் இலக்கியங்கள் செழித்திருந்த பொற்காலம் சேர்த்துவைத்த செயுள்வளத்தில் செம்மாந்த பழையவளே! அவ்வியலில் வேரூன்றி அறிவுயர்ந்த தற்காலம் அழகழகாய் உரைநடையும் ஆளுகின்ற புதியவளே! குலங்கடந்து நெறிகடந்து நிலவரம்பின் தடைகடந்து கோமகளாய்த் தமிழர்மனம் கொலுவிருக்கும் தமிழணங்கே! நிலவினுக்கே பெயர்ந்தாலும் நினதாட்சி தொடருமம்மா! நிறைகுறையாச் செம்மொழியே நிலைபெறநீ வாழியவே! பாடலை தரவிரக்க தமிழ்த்தாய் கவிதைகள்தமிழ்Tamil Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 1239 views கருத்துகள் மிக அழகாக உள்ளது இனிமையாகவும் மிக அழகாக உள்ளது இனிமையாகவும் உள்ளது வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments அருமையான அருமையான பாடல்.அழகானவரிகள்"நில வரம்பின் தடைகடந்து"கடக்கும்.நிலைக்கும். இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல Log in to post comments மிக அருமை! மிக அருமை! Log in to post comments (No subject) Nandhu Log in to post comments (No subject) " width="44" /> Log in to post comments
மிக அழகாக உள்ளது இனிமையாகவும் மிக அழகாக உள்ளது இனிமையாகவும் உள்ளது வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
அருமையான அருமையான பாடல்.அழகானவரிகள்"நில வரம்பின் தடைகடந்து"கடக்கும்.நிலைக்கும். இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162