அடியே என்னவளே..
என் மீது உனக்கு அப்படி என்னடி கோபம்
வானவில் படிகளில் வேகமாக ஏறிச் சென்று
மேகப் படகில் சென்று அமர்ந்து கொண்டாயே..
அடடா..பெண்புத்தி பின்புத்தி என்பதை நிரூபித்து விட்டாயே..
தென்றல் தோழி கோபப்பட்டதால் மேகப் படகு உடைந்து
நீல வானக் கடலில் வீழ்ந்து விட்டாயே..
கவலை கொள்ளாதே கண்மணியே..
என் கண்ணீர் துளிகளை சூரிய அனுமனிடம் கொடுத்து அனுப்புகிறேன்
அது மழையாக வரும்போது அதனோடு வந்துவிடு என் வெண்ணிலவே..
உன்னை அந்தப்புரக் குளத்தில் வந்து அள்ளிக் கொள்கிறேன் அல்லியே..
(2 votes)
கருத்துகள்
நன்றாக உள்ளது நண்பரே....
Submitted by infentarokiaraj on வியாழன், 06/01/2011 - 7:33pm.
நன்றாக உள்ளது நண்பரே....










