விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்
இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்
வறுமை
கந்தை ஆனாலும் கசக்கி கட்டு
சரி
காயும் வரை எதை கட்டுவது 
பதிவுகள்
மலை உச்சிப் பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
தியேட்டர் சேரில்,
புழுதி படிந்த
கார் கண்ணாடியில்,
போன்ற பலவற்றில்
சந்தோஷமாய்
எழுதிய என் பெயர்
குறுகிப் போனது
கடன் பத்திரத்தில்

கருத்துகள்
தங்கள் விருப்பத் தேர்வுகள்
தங்கள் விருப்பத் தேர்வுகள் நல்லாயிருக்கு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
இனி காவிரியை கடக்க ஓடம்
இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்
.....
வலியான வார்த்தைகள்....
உங்கள் ரசனை நன்றாக உள்ளது....

இனி காவிரியை கடக்க ஓடம்
இனி
காவிரியை கடக்க
ஓடம் தேவையில்லை
ஒட்டகமே போதும்
ரசித்து படித்த கவிதை. மிகவும் நன்று.

















