Skip to main content

நான் தாயான கதை

URI: http://tamilnanbargal.com/node/39544
கருத்துகள்: 83Likes: 141671 viewsசிறப்பு பதிவு

நான் தாயான கதை

dharshini's படம்

பெண்ணாய் பிறந்தேன்
மகாலட்சுமி என்றார்கள்

பருவம் கொண்டேன்
தேவதை என்றார்கள்

பார்ப்பவர் கண்களுக்கு விருந்தானேன்
பெண் சிலை என்றார்கள்

பேசினாலே பாசம் என்றார்கள்
பேசாவிட்டால் மோசம் என்றார்கள்

பின்னால் வந்தவர்களை
கோபத்துடன் எச்சரித்தேன்
தலைக்கனம் என்றார்கள்

காளைகள் வட்டமிட்டு
கண்டதை களவாட எண்ண
கவனமுடன் களன்று கொண்டேன்
மோகினி என்றார்கள்

காதல் கவிதைகளில் நான் நாயகி ஆகி
கனவில் காதலி ஆனேன்.

ஒருமுறை பார்த்தாலே விரும்புகிறாள் என
ஓராயிரம் முறை சொல்லிக்கொண்டார்கள்

பெண் பார்த்தார்கள்
குத்து விளக்கு என்றார்கள்

என் பின்னால் அலைந்தவர்கள்
ஏமாற்றிவிட்டாள் என்றார்கள்

தாடி வைத்து புகை பிடித்து குடித்து
என்னை காரணம் காட்டினார்கள்

காதல் தோல்வி கவிதை எழுதி
ஏமாற்றத்தை ஆற்றிக்கொண்டார்கள்

ஒருவன் கை பிடித்தான்
குல விளக்கு என்றார்கள்

படுக்கைக்குள் வீழ்ந்தேன்
அனைத்தும் திறந்து
கண் மட்டும் மூடிக்கொண்டேன்
அழகு தேவதை ஆனேன்

அரவணைப்பில் வெம்பி மாசமானேன்.
உண்டாகியிருக்கா என்றார்கள்

மசக்கை வந்து புளிப்பாய்
மாங்காய் கேட்டேன்
மாமியாரின் கேலிக்குள்ளானேன்

பத்தாம் மாதம் மகப்பேறு கொண்டேன்
என் குழந்தைக்கு அம்மா ஆனேன்

ஒருவருக்கு உணவு கொடுத்த நான்
இருவருக்கும் உணவானேன்
தாய் என்றார்கள்.

மறக்காம அதிக ஓட்டு போட்டு என்னை போட்டியில் ஜெயிக்க வைப்பீங்களாம்   

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

ம்ம்ம்... நன்று

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

மிகவும் அருமையான கவிதை.....பெண்ணின் பிறப்பு முதல் தாய்மை வரை அருமையாக இனிய வரிகளில் வடித்துள்ளீர் அருமை.....

என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com

nandhini's படம்

சூப்பரா இருக்கு தர்ஷினி

நான் இப்படி ஒரு கவிதையை எதிர்பார்ரக்கவில்லை. உண்மையை போட்டு உடைத்து விட்டீங்க பாராட்டுகள்
:-*

Nandhu

unmai varigal unarthiya valikal pala...nala kavithai karpanai thavirthu...ana kadai se vendukoo:clap: l artham atrathu....

 .,  பெண்மையின் ,  படிப்படியான‌  வளர்ச்சியினைக்  காட்டும்  அழகான‌  கவிதை    :clap::clap:

Mrs.Lathabalu

கவிதையின் கருப்பொருள் என்ன?

 
பருவ கவர்ச்சிக்கும், திருமணத்திற்கும் எதற்கு முடிச்சு 
 

படுக்கைக்குள் வீழ்ந்தேன்
அனைத்தும் திறந்து
கண் மட்டும் மூடிக்கொண்டேன்
அழகு தேவதை ஆனேன்

அரவணைப்பில் வெம்பி மாசமானேன்.
உண்டாகியிருக்கா என்றார்கள்

அழகான காதலின் தொடுதலை, அபசாமான கலவுடன் ஒப்பிடுதல் ஏன்?
 
ஒருவருக்கு உணவு கொடுத்த நான்
இருவருக்கும் உணவானேன்
தாய் என்றார்கள்.
 
பகிர்ந்து உண்ணுதல் தாம்பத்தியம், நீங்கள் வெறும் உடலை தரவில்லை, அந்த ஆணும் உங்களுடுன் கலந்தான் 
நீங்கள் கருவில் தரும் உணவை, அந்த குழந்தை நாளை அதன் குழந்தைக்கு தரும் 
 
இலக்கு இல்லாத அம்பு, உங்களுடைய கவிதை, மன்னிக்கவும்   |(  

dharshini's படம்

வெளிப்படையான உங்கள் கருத்துகள் என்னை மேலும் சிறப்பாக எழுதத்தூண்
டுகிறது
நன்றி

தர்ஷினி

ஒருவன் கை பிடித்தான்
குல விளக்கு என்றார்கள் எனும் வரிகள்வரை உங்கள் கவிதை அருமையாக அமைந்துள்ளது,
                     

பேசினாலே பாசம் என்றார்கள்
பேசாவிட்டால் மோசம் என்றார்கள்

பின்னால் வந்தவர்களை
கோபத்துடன் எச்சரித்தேன்
தலைக்கனம் என்றார்கள்

காளைகள் வட்டமிட்டு
கண்டதை களவாட எண்ண
கவனமுடன் களன்று கொண்டேன்
மோகினி என்றார்கள்

உண்மைதான்!!!!!!!!!!!!!!!!!!       

pakee's படம்

நன்று     

சொர்க்கத்திற்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால் 
பூமியை நரகமாக்கி இருக்க மாட்டான் மனிதன்!..♥

www.PakeeCreation.Blogspot.Com

samiii's படம்

அருமை,
ஒருசில குறைகள் இருந்தாலும் உங்களது கவிதை நன்றாக உள்ளது.
      

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்

உறவுகளின் உணர்சியை வர்ணிக்கும் போது கொஞ்சம் கவனம் தேவை... ஆனால் இதை ஒரு சிறந்த முயற்சி என்று சொல்லலாம். அருமை

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

உலகை ரசிக்க கண்களை படைத்துவிட்டான் , 
கண்கள் செய்த தவறால்
அவளை கண்டு மயங்கி
இவள் தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் 
என்று 
எண்ணி கற்பனையில் கவிதை எழுதி கனவுகளோடு பின் தொடர்கிறான்
 அவள் மீதும் தவறில்லை ,
அவன் மீதும் தவறில்லை. 
என்றேனும் அவனுக்கும் சரி 
அவளுக்கும் சரி திருமணம் 
நடந்தே தீரும் அதில் சில ஊடல்களும் கூடல்களும் இருக்கும், பின்பு 
    அவள் தாயாவது தான் சிறப்பு ,
ஒரு உயிரை படைக்கும் அந்த 
இனிய தாம்பத்யத்தினை இன்னும் 
சிறப்பாக எழுதி இருந்தால் 
நன்றாய் இருந்திருக்கும் தோழியே..?

வெற்றி பெற‌ 

 எனது வாழ்த்துக்கள்.       

 இன்னும் சிறப்பான கவிதைகளை உங்களிடம் இருந்து எதிர் பார்ப்பேன்.........

மனமொத்த‌ இருவருக்குத்தான் வாழ்க்கை இனிக்கும் சுக துக்கங்கள் உண்டு. 
//ஒருவருக்கு உணவு கொடுத்த நான்
இருவருக்கும் உணவானேன்//

என்பது 

இருவருக்கும் உயிரானேன் 

என்றோ

இருவருக்கும் உற‌வானேன்

என்றோ இருந்திருக்கலாம்.

Mathevan's படம்

"தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு
ஷாஜஹானின் கண்கள் வேண்டும்"

என்ற‌ வரிகள் நினைவுக்கு வருகின்றன‌.
பெண்களின் பார்வையில் உங்கள் கவிதை படிக்கப்படும் போதெல்லாம் நீங்கள்
பாராட்டப்படுவீர்கள்.

உண்மையை தைரியமாக‌ சொன்னதற்கு பாராட்டுக்கள்.
பெண்களின் மன நிலையை இது போன்ற‌ கவிதைகளிலிருந்து
நாங்கள் புரிந்து கொள்ள‌ முடியும்.

காஞ்சிப் பட்டல்ல‌ என் கவிதை
ஆதாம் ஏவாள்
அரை மறைத்த‌ மரவுரி..........

என்றென்றும் அன்புடன்,
மாதேவன்

varikal anaithum sila pozhukalil unmaithan...
oru varutham oru thalai patchamana sila varikal manitha inathilil
oru padaipinai mattume kuraikuruvathaga irunthathu...

ஆய்க்குடிமணி

desingh's படம்

படுக்கைக்குள் வீழ்ந்தேன்
அனைத்தும் திறந்து
கண் மட்டும் மூடிக்கொண்டேன்
அழகு தேவதை ஆனேன்

COPY & PASTE GOOD,,,,,,,,,              

VERY SUPERB.. EVERY LINE.... GOOD ONE...
THANKS DHARSHINI

உங்கள் கவிதையை நான் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள்  பெண்ணாய் பிறந்ததால்  மகாலட்சுமி என்றார்கள், தேவதை என்றார்கள்; பெண்சிலை என்றார்கள்; மோகினி என்றார்கள், காதலி என்றார்கள், குத்துவிளக்கு என்றார்கள், குலவிளக்கு என்றார்கள் , அழகு தேவதை என்றார்கள். இவையெல்லாம் உங்கள் அழகை இரசித்தவர்கள் சூடிய பட்டப்பெயர். மன்னிக்கவும் கவி புலவர்கள் சூட்டிய பட்டப்பெயர். நீங்களும் மகிழ்ந்திருப்பீர்கள். சந்தோசமடைந்து  இருப்பீர்கள். 
என் பின்னால் அலைந்தவர்கள் தாடி வைத்துவிட்டு இவள்  என்னை  ஏமாற்றி விட்டாள் என்று  காரணம் காட்டினார்கள்.
தாடி எதற்கு வைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? திருவள்ளுவர், ஏசுபிரான், முகம்மத் நபி மற்றும் அவரது சீடர்கள் ஏன் தாடி வைத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் அதனை அறிந்துவிட்டு கவிதை எழுதுவது உங்களுக்கு நலம் பயக்கும். காதலில் தோற்றவர்கள் எவரும்  தாடி வளர்ப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? திரைப்படத்தில் வேண்டுமானால் இப்படிப்பட்ட காட்சிகளை வைக்கலாம். அதற்காக தாடி வைப்பவர்களை கிண்டல் செய்வது கவிதைக்கு அழகல்ல. இவள் இல்லை என்றால் இன்னொருவள் என காதலர்கள் சென்று விடுவார்கள். தாடி வைப்பவர்கள் அனைத்து மக்களின் இலட்சியப் புருஷர்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். எனவே தாடியை கிண்டல் செய்வதை நிறுத்தி விடுங்கள்.  உங்களுக்கு சமாதானம் உண்டாகக் கடவதாக.

 தாடி வைப்பவர்கள் அனைத்து மக்களின் இலட்சியப் புருஷர்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். 

எங்க ஊர் எந்த குடிகாரனை பார்த்தாலும் தாடியோட தான் திரிவாங்க

    :bigsmile:           

கருத்துக்கு நன்றி தாடிக்காரரே

தர்ஷினி

பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறது.
இருந்தாலும் உங்களுடைய இந்த பகீங்கர வெளிபாட்டை நான் பாராட்டுகிறேன்.
கவி வரிகள் சிந்திக்க வைக்க வேண்டும்., முகம் சுளிக்க வைக்க கூடாது.
அடுத்த முறை திருத்தி கொள்ளுங்கள். 
           |-)    

அனல் மேலே பனித்துளி

http://rajankhan.wordpress.com/

 (மிகவும் நேர்த்தியான முறையில் நடை, இலக்கியம் அமைந்துள்ளது அருமை நெகிழ்ந்தேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மொத்தமும் உங்களை தேடி குவியத் தொடங்கட்டும்,         ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குதான் புரியும் அதை  அழகாய் எடுத்து எழுத்தில் சொன்னிர்கள்  ஆனால் தாடிகள் காதல் கவிதைகள் எழுதுவதும் இல்லை

 

 

devimala's படம்

      
வாழ்க பெண்கள்.......!
உணருங்கள் ஆண்கள்.......!
(உணரா ஆண்கள் மட்டும் )