rajudranjit's படம்

நல்லதொருக் காலம் வரும் கவலைப்படாதே
நமக்கொரு நேரம் வரும் மறந்துவிடாதே
கொடுமை செய்யும் கூட்டத்தையே ஒழித்துவிடுவோம்
அங்கே மனிதரெல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்திடவே

வறுமையில்லா வாழ்க்கதனை வளர்த்தெடுக்கவே
இளைஞர்களை ஒற்றுமையுடன் சேர்த்திடுவோம்
துடிப்புள்ள கொடையளிப்போர் ஒன்றுகூட‌
தடையில்லை வெற்றியெனும் முன்னேற்றமே

போராட்ட வாழ்க்கையிலே போராட்டம் நமக்கெதற்கு
தேரோட்டம் இழுப்பது போலே ஒன்றுகூடி மகிழ்வோம்
அங்கே வேண்டுவன உன் விருப்பமென எடுத்துகொள்
நம்பொருளை கேட்டுபெற வீணரல்ல நாமே

அடுத்தவரை ஏமாற்றும் கூட்டத்தின் கொட்டமடக்குவோம்
பெற்றவரை மனம‌கிழ பாராட்டி வளமளிப்போம்
கல்வி கற்று தந்த ஆசிரியருக்கு தக்க உதவிபுரிவோம்
எல்லோரும் உடன்பிறப்பாய் சொந்தம் வளர்ப்போம்

பொய்கள் பேசும் பொல்லாதவர் இல்லாதாக்குவோம்
களவு செய்யும் கள்வரையும் மறக்க செய்குவோம்
தவறு செய்யும் தகாதவர் தலையிலடித்து திருத்துவோம்
அங்கே இனிமை இனிமையென வளமை பெருக செய்குவோம்

நாடு வாழ நாமும் வாழும் சூத்திரம் சொல்லுவோம்
கேடு செய்ய முயலும் சூதகருக்கு சூடுபோடுவோம்
பாடுபட்டு வாழ்வதற்கு பாடம் புகட்டுவோம்
நாளைய இளையோர் நம்நாட்டின் பாதுகாவலராக்குவோம்

வாழ்க பாரதம் வாழ்க பாரதம் வாழ்க பாரதமே
எனும் புகழ் திகழ பாரினிலே சிறந்ததென உயர்த்திடுவோம்
நாளும் இனிமை அமைதிவழி வாழ்ந்திடவே
நல்லோராய் நாமனைவரும் கூடி மகிழ்ந்திடுவோம்

என்றும்: சுஷ்ருவா

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

கருத்துகள்

aro...'s படம்

உங்களின் புதிய எண்ண‌ங்கள்


7

உங்களின் புதிய எண்ண‌ங்கள் சிறப்பாக உள்ளனர்; Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


rajudranjit's படம்

இது புதிய எண்ணம் இல்லை


இது புதிய எண்ணம் இல்லை நண்பரே, நமது முன்னோர்கள்,பெரியவர்கள் சொன்னது தான் இக்கருத்து,

அன்று பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்பளித்து இளையோர்கள் நல்வழியில் சென்றனர் இன்று அப்படியில்லை நண்பரே!

நான் புதியவன் எனது பானியில் இக்கவிதை புதியதாக உமது மனதிற்குத் தெரிகின்றது அவ்வளவு தான் நண்பரே!

நன்றி நண்பர் அரோ அவர்களே!

Ponvannan's படம்

"நாளும் இனிமை அமைதிவழி


8

"நாளும் இனிமை அமைதிவழி வாழ்ந்திடவே
நல்லோராய் நாமனைவரும் கூடி மகிழ்ந்திடுவோம்" என்று முடித்திருப்பது மிக மிக சிறப்பாக இருக்கிறது. நிறைய கருத்துக்கள் கொண்ட கவிதை இது. எனது பாராட்டுதல்களும் வாழ்த்துகளும்.

rajudranjit's படம்

நன்றி ஐயா! தங்களின்


நன்றி ஐயா! தங்களின் ஆசீர்வாதம் போலாகட்டும் ஐயா!

yarlpavanan's படம்

"நல்லதொருக் காலம் வரும்


7

"நல்லதொருக் காலம் வரும் கவலைப்படாதே
நமக்கொரு நேரம் வரும் மறந்துவிடாதே" என்று
நண்பர் நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்!
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நன்றி அன்பரே!


நன்றி அன்பரே!

vinoth's படம்

வாழ்க பாரதம் வாழ்க பாரதம்


4

வாழ்க பாரதம் வாழ்க பாரதம் வாழ்க பாரதமே


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!