vinoth's படம்

நட்பு தேடி ஒரு உயிர்!...

நட்பு தேடி ஒரு உயிர்!...
====================

செயற்கை உணவின்
ஜீரணிப்புகள்!

கண்டுபிடிப்புகளில்
செயற்கை சுவாசங்கள்!

தொலைந்த மனிதத்தில்
மருகங்கள்!

நம்பிக்கை துரோகத்தில்
நட்புகள்!

தேவைகளின் பிடியில்
சொந்தங்கள்!

இன்னும்
கலைக்கப்பட்ட
கனவுகள் மீதமிருக்க
ஒருதுளி
நம்பிக்கையில்
இயற்கையின்
நட்பு தேடி
ஒரு உயிர்!...

--
வினோத் கன்னியாகுமரி

9
Your rating: None Average: 9 (2 votes)

கருத்துகள்

dharshi's படம்

"நம்பிக்கை


"நம்பிக்கை துரோகத்தில்
நட்புகள்..."

எல்லா நட்பும் துரோகதில் இல்லை தோழா..!!
சரியான நட்பை தேர்வு செய்யாதது அவரவர் குற்றமே...
நட்பின் குற்றமல்ல...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

மன்னிக்க வேண்டும் இது ஒரு


மன்னிக்க வேண்டும்

இது ஒரு கவிதை மட்டுமே
இதில் வேறெந்த தனிநபரைப்பற்றிய அனுபவங்களையும் இணைத்து பார்க்கவேண்டாம் என்பது என் கருத்து.

மிக்க நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sumathy.a's படம்

இல்லையே வினோத், தர்ஷினி


இல்லையே வினோத், தர்ஷினி பொதுவாகத்தானே கருத்துக்கொடுத்திருக்கிறா.................

vinoth's படம்

அவ்வாறு இருந்தால் கவிதை


அவ்வாறு இருந்தால் கவிதை முழுவதையுமே படித்து பொதுவான கருத்து கூறியிருக்கவேண்டும்

இங்கே கீழே கூறப்பட்டிருக்கிற மற்ற கருத்துகளையும் பாருங்களேன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நானும் தனிப்பட்ட எவரயும்


நானும் தனிப்பட்ட எவரயும் குறித்து சொல்லவில்லை
தனிப்பட்ட எவரின் அனுபவத்தையும் குறிப்பிட்டும் சொல்லவில்லை
கவிதையில் வரும் "நம்பிக்கை துரோகத்தில்
நட்புகள்!" என்ற வசனத்திற்கு எனது கருத்தை சொன்னேன் அவளவும் தான்.

மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

இதில் நட்பை மட்டும்


இதில் நட்பை மட்டும் கூறவில்லை

அறிவியல், செயற்கை,
மனிதம், நட்புகள்! சொந்தங்கள்!

இவற்றை வெறுத்தவர் இயற்கையின் நட்பை தேடுவது தான் கூறப்பட்டுள்ளது


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

ஆமாம் இவற்றை வெறுத்தவர்


ஆமாம் இவற்றை வெறுத்தவர் வெறுக்கவேண்டிய காரணம் சரியான நட்பை தெரிவுசெய்யாமை என்பதையே நான் குறிப்பிட்டேன் நல்ல நட்பை அவர் தெரிவு செய்திருந்தால் வெறுப்பு வராது என்பது எனது தனிப்பட்டகருத்து.

காரணம் "காயங்களுக்கு நல்ல நட்பு மருந்தாக இருக்கும் என்று"

அதற்காக யாரையும் குறிப்பிட்டு அல்ல,

"உங்களை என் கருத்து காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன்"

"இத்தளத்தில் நான் பகிரும் கருத்துகள் அல்லது ஆக்கங்கள், சக நண்பர்களை எவரையும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வேறு எவ்விதத்திலோ புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல."


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

இங்கு சொந்தங்களே பல வித


இங்கு சொந்தங்களே பல வித தேவைகளின் பிடியில் சார்ந்திருக்கறார்கள் எனும் போது நட்பை என்ன கூற?

பழகும்முன் நட்பை நல்லதா கெட்டதா என பார்க்கச்சொல்கிறீர்கள், நல்லது

இவன் எல்லோரையும் நட்பாக எண்ணி சூடுபட்டுக்கொண்டவன்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vinoth's படம்

இங்கு "இவன்" என்றது கவிதையில்


இங்கு "இவன்" என்றது கவிதையில் கூறப்பட்ட "நட்பு தேடிய உயிர்" த்தான்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


karthikeyan.t's படம்

தர்ஷி சொல்வது யாரையும்


தர்ஷி சொல்வது யாரையும் குறிப்பிட்டு சொல்வது போல் இல்லையே நண்பா நண்பர்களுக்குள் வீண் கலக்கம் வேண்டாம்


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


vinoth's படம்

கலகம் கலக்கம் எதுவும் இல்லை


கலகம் கலக்கம் எதுவும் இல்லை கார்த்திகேயன்
நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


helpinghands's படம்

உள் மனம் ஓயாமல்


உள் மனம் ஓயாமல் சொல்கிறது
காய்ந்த சருகின் விரைப்பை விட்டு
வளைந்து நௌpயும் இலையின்
மென்மை வேண்டுமென்று

ஒற்றைப் புல்லின் கூரிய நோக்கும்
சீரிய பார்வையுமே சிந்திக்கத் து{ண்டுகிறது

நிலையற்றது வாழ்க்கை நதி
மாற்றங்கள் மட்டுமே நம்மை புதுப்பிக்கும் வழி

எண்ணங்களுக்கு புது
வண்ணக் கலவை பூசி
புதியதோர் உலகுக்கு
புதுமனைப் புகுவிழா செய்வோ

vinoth's படம்

நண்பரே தங்கள் கவிதையா?


நண்பரே

தங்கள் கவிதையா? அருமை

இதை http://tamil2friends.com/node/add/kavithai இங்கே சென்று தனிக்கவிதையாகவே போடலாமே
நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...