jram178's படம்

  

   காதலோடு என்னருகே நெருங்கி நின்றாய்-ஏன்
     கவிப்பெண்ணே கண்டவுடன் பயந்துச் சென்றாய்
   மாதரசி மனவானில் தேடுயொன்றா-நீ
     மறைந்தாயா அறியேனே இதும்நன்றா
  பேதமது நம்மிடையே வருதல் வேண்டா-என்
     பேரன்பில் இனிமேலும் ஐயம்உண்டா
   ஆதலினால் அன்பேநீ ஓடிவருவாய்-என்
      அழைப்புக்கு செவிசாய்த்து நாடிவருவாய்
  
   கற்றதமிழ் கைகொடுக்கத் தினமுமொன்றே-நான்
      கவிபாடி என்வலையில்  தரவும்நன்றே
   உற்றதுணை நீதானே மறந்தாபோனாய்-நெஞ்சம்
      உற்றதுயர் அறிந்துமா பறந்தேபோனாய்
   குற்றமென்ன கண்டாயா கூறுப்பெண்ணே-என்
      குறைகண்டு நீக்கிடவும் கவிதைப்பெண்ணே
   செற்றமது வேண்டாவே என்பாலென்றும்-நல்
      செம்மொழியே துணையாக  இருப்பாயென்றும்
  
    உண்மைமிகு உறவுகளைத் தேடித்தந்தாய்-இவ்
      உலகமெனைப் பாராட்ட ஓடிவந்தாய்
   தொண்மைமிகு  தனித்தமிழே வருவாயாக-உன்னை
      தினம்பாட நல்வாய்ப்பு தருவாயாக
   தண்மைமிகு தென்றலென  தழுவநீயே-நெஞ்நில்
      தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
   திண்ணமுற என்வலையில் எழுதநானே-என்றும்
      தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே
         
                      புலவர் சா இராமாநுசம்
 

 

6
Your rating: None Average: 6 (3 votes)
http://pulavarkural.blogspot.com/2011/10/blog-post_04.html

கருத்துகள்

aro...'s படம்

அய்யா அருமையான கவிதையை


6

அய்யா அருமையான கவிதையை எளிமையில் இயற்றி தந்தமைக்கு நன்றிகள் Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


saravanamuthu's படம்

(No subject)


4

Clap Clap

kirikasan's படம்

தமிழ் வருவாளய்யா! தங்களின்


8

தமிழ் வருவாளய்யா!
தங்களின் இந்தக்கவிதை கண்டும் தமிழ்ப்பெண் வரவில்லையென்றால்,
அவளும் தமிழ் மறந்த நம் உறவுகள் போலாகி விடுவாளே!