Skip to main content

தாயே உன்னை மறந்தறியேன்!!

URI: http://tamilnanbargal.com/node/40128
கருத்துகள்: 52Likes: 13760 viewsசிறப்பு பதிவு

தாயே உன்னை மறந்தறியேன்!!

raj_tamil82's படம்

உடல் முறித்து பெற்ற தாயே

எனை குருதிச் சிந்தி வளர்த்த நீயே

காடு மேடு பாராது நீதான்

கால் கடுக்க வேலை செஞ்ச


வெயில் சுட்ட போதிலும்
மழை தொட்ட போதிலும்
தூசு பட்ட போதிலும்
முந்தானையில் மூடி வளர்த்த நீயே

ரப்பர் மரத்தை சீவி நீதான்
பிள்ளை வயிற்றில் ஈரம் போட்ட
கீறல் கொஞ்சம் பட்ட போது
ஊரக்கூட்டி ஏலம் போட்ட

பாற்கடலே சந்தைக்கு வந்தாலும்
தாயைபோல ஒன்னு கிடைக்குமா
தலைக்கு மேல வெள்ளம் வந்தாலும்
உன் கழுத்தணைத்த தஞ்சம் பெறுமா?

கக்கத்திலே கந்துவட்டி தாளோட
எனைக் கைபிடிச்சி கூட்டிவந்து
பள்ளியிலே நீ சேர்த்த
வட்டிக்கு கொல்லையிலே நீ வெந்த

உடல் சுருண்டு நீ கிடந்த போதிலும்
உன் மாருருஞ்சி வளர்ந்தேன் நானம்மா
தாயே என்றொரு வார்த்தையில் தானே
மலையும் தலை குனிந்து வாழ்த்துதம்மா

இங்கு மெத்தை மேலே நான் உறங்குறேன்
இதுவே இன்னும் போதலைன்னு சொல்லுறேன்
நீ இன்னும் நத்தை கூட்டிலே கிடக்குற
அதுவே உனக்கு போதுமுன்னு சொல்லுற

ஒருசாண் வட்ட பையிலே
உருவெடுத்தப் பையன் நான்
உன் அரை சாண் வயிற்றுக்கு
படியளக்க மாட்டேனா?

இன்று நானும் உன் பக்கமில்ல
உனக்கு வாய்த்த புருசனும் சரியில்ல
ஆனாலும் என் குடும்பம் சிறந்ததென
ஊர் முழுக்க பீத்திக்கிற ஏனம்மா?

நாலு அங்குல சட்டியில
நானூறு வெள்ளி சேர்த்துவைச்ச
நானூறு நாள் தாண்டியும்
எனக்கு நாலு வெள்ளி சேரலையே

குடிகார புருசங்கிட்ட
அடிவாங்கி உடல் வலுத்த
அவனுக்கு முடியாத போதெல்லாம்
அன்னையப் போல் அரவணைச்ச

ஊர்குருவி வானை அடித்து பறந்த போது
கைகாட்டிச் சிரிக்க வைத்தாய் அம்மா
இங்கு வானைக் கிழித்து விமானம் போகுதம்மா
உனக்கு நான் காட்ட மனம் துடிக்குதம்மா

உடல் முறித்து பெற்ற தாயே
எனை குருதிச் சிந்தி வளர்த்த நீயே!!    H)    

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

aaju's படம்

இங்கு மெத்தை மேலே நான் உறங்குறேன்

இதுவே இன்னும் போதலைன்னு சொல்லுறேன்

நீ இன்னும் நத்தை கூட்டிலே கிடக்குற

அதுவே உனக்கு போதுமுன்னு சொல்லுற.......

                      

ஆஜு

raj_tamil82's படம்

நன்றி aaju.

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

vinoth's படம்

தாய்க்கு எழுதும் கவிதைகள் அனைத்தும் சிறப்பாகவே அமைவது என்ன மாயமோ

கவிதை மிக அருமை.

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

raj_tamil82's படம்

உண்மைதான் வினோத் தாயிட் சிறந்த கோவில் இல்லையே, அதனால்தான் என்னவோ.

 

       

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

raj_tamil82's படம்

நன்றி dharshan.

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

நன்றி

 

:smile:" width="45" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

shivani's படம்

arumayana kavithai" width="44" />

தமிழ் என் உயிர்... தமிழ் நண்பர்கள் என் கண்கள்... வாழ்க தமிழ்

:smile:" width="45" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

Ponvannan's படம்

ஊர்குருவி வானை அடித்து பறந்த போது

கைகாட்டிச் சிரிக்க வைத்தாய் அம்மா

இங்கு வானைக் கிழித்து விமானம் போகுதம்மா

உனக்கு நான் காட்ட மனம் துடிக்குதம்மா

தாய்ப்பாசம் என்றுமே மறையாதது, அளவில் குறையாதது, நெஞ்சில் நிறைவானது, எப்பொழுதும் இறையானது.
 
நல்ல கவிதை படைத்த கவிஞரே உங்கள் தாய்ப்பாசம் எங்கள் மனதை வருடிவிட்டது. இன்னும் நிறைய கவிதைகள் எழுதி எங்களுக்கு விருந்து கொடுங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

raj_tamil82's படம்

நன்றி அண்ணா :smile:" width="45" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

ketherine's படம்

nice" width="44" />

" width="50" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

 நன்றி நண்பா
:smile:" width="45" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

ஒருசாண் வட்ட பையிலே

உருவெடுத்தப் பையன் நான்

உன் அரை சாண் வயிற்றுக்கு

படியளக்க மாட்டேனா.........

 
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே 

" width="50" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

தாயைப் போல நடமாடும் தெய்வம் இவ்வுலகில் வேறில்லை....அம்மா என்ற ஒற்றைச் சொல்லில் இந்த அகிலமே அடங்கி விடும்....அருமையான பதிவு நண்பா!

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

 நன்றி வினோ :smile:" width="45" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

" width="50" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

srimalar's படம்

குடிகார புருசங்கிட்ட

அடிவாங்கி உடல் வலுத்த

அவனுக்கு முடியாத போதெல்லாம்

அன்னையப் போல் அரவணைச்ச

 

" width="44" />    " width="44" />   " width="44" />

" width="50" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

nithya83's படம்

பாற்கடலே சந்தைக்கு வந்தாலும்
தாயைபோல ஒன்னு கிடைக்குமா
தலைக்கு மேல வெள்ளம் வந்தாலும்
உன் கழுத்தணைத்த தஞ்சம் பெறுமா?

கக்கத்திலே கந்துவட்டி தாளோட
எனைக் கைபிடிச்சி கூட்டிவந்து
பள்ளியிலே நீ சேர்த்த
வட்டிக்கு கொல்லையிலே நீ வெந்த

 

முத்தான வரிகள்... தாயவள் அப்படித்தான். அருமை அருமை" width="44" />

" width="50" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

தரணியில் தாய் பற்றி எழுதும் வரிகள் அத்தனையும் அழகுதான்...உங்களின் வரிகள் அதற்க்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. வாழ்த்துக்கள்.

ஆய்க்குடிமணி

veerakrish's படம்

Arumai nanbare arumai
thodattum um kalaippani......

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா

:smile:" width="45" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!