rajudranjit's படம்

தமிழுக்கு வயதது வளருமென
தமிழுக்கு தமிழே துணையென‌
த‌மிழ‌ர் ம‌ன‌ம் உண‌ர்வுபெற‌
த‌மிழே வாழ்க‌வென‌ ச‌ங்க‌து முழ‌ங்கே!

அமிழ்து எங்க‌ள் த‌மிழென‌
ஆன்றோர் சொல் வாழென‌
இன்ப‌ம‌திலுண்டு இனிமைய‌துவென‌
த‌மிழே வாழ்க‌வென‌ ச‌ங்க‌து முழ‌ங்கே!

அறிவினுள் அறிவு த‌மிழென‌
அற‌ம‌து க‌ற்பித்த‌ த‌மிழென‌
மார்த‌ட்டும் எங்க‌ள் த‌மிழென‌
த‌மிழ‌து வாழ்க‌வென‌ ச‌ங்க‌து முழங்கே!

ம‌ண்ண‌து ம‌ண‌க்க மழையென‌
வின்ன‌து சிற‌க்க‌ நில‌வென‌
த‌ரணியில் சிற‌ந்த‌ த‌மிழென‌
த‌மிழே வாழ்கவென சங்கது முழங்கே!

வணக்கத்திற்குறியது தமிழென‌
மனித வாழ்வது சிறக்க தமிழென‌
உலக புகழுக்கு ஏற்றது எம்தமிழென‌
த‌மிழ் வாழ்க‌வென‌ ச‌ங்க‌து முழ‌ங்கே!

தமிழே வாழ்க வாழ்க வாழ்கவென‌
தரணிக்கு தமிழால் வாழ்வென‌
முரசது கொட்டி மகிழ்வோமென‌
எங்கள் தமிழ் வாழ்கவென சங்கது முழங்கே!

என்றும்: சுஷ்ருவா

{எனது அருமை நண்பர் யாழ்பாவாணருக்கு இக்கவிதைப் பரிசு உரித்தாகட்டும்}

8.8
Your rating: None Average: 8.8 (5 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

பாவொன்று பரிசாக


10

பாவொன்று பரிசாக எனக்கீந்தீர்
புனைந்த பாக்களில் சிறந்ததிதுவே
படிக்கப் சுவையாகவும் இசையோடு கேட்கவும்
நல்ல பாவிது வாசகன் மகிழ்வான்...
புனையுங்கள் இன்னும்
நல்ல பாக்கள் பல...
"எங்கள் தமிழ் என்றும் வாழுமென்று
சங்கே முழங்கு" எனப் பாடுங்கள்...
"சூழலைச் சீர் திருத்தலாம்
வாருங்கள்" எனப் பாடுங்கள்...
பள்ளிச் சிறார்களுக்குப் பயன்தரும்
வழிகாட்டலைப் பாடுங்கள்...
கண்ணதாசனைப் போல
தத்துவங்களில் எடுத்துவிடுங்கள்...
வைரமுத்துவைப் போல
ஊர் மணம் கமழப் பாடுங்கள்...
உங்கள் எண்ணங்களில் தோன்றும்
எந்தச் சீர் திருத்தங்களையும்
அவிட்டுவிடுங்கள்...
எல்லாம் சுஷ்ருவா என்று
பெயர் சொல்லட்டும்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

தங்கள் சொற்களுக்கு சிரம்


தங்கள் சொற்களுக்கு சிரம் தாழ்த்துகின்றேன்! முயற்சி செய்கின்றேன், நான் புத்தகங்களைப் படித்து வருடங்கள் பலவாகிவிட்ட காரணம் சிந்தனைக்கு ஏற்ற சொற்களை பதிவில் கொடுக்க இயலவில்லை, எனது சூழலும் அதற்குத் தடையாக உள்ளது, அதே சமயம் "காரணம் பெரிதல்ல, காரியம் முக்கியம்" என்று தாங்கள் நினைப்பதும் எனது மனதில் கேட்கின்றது!

எமக்கு கவிதை எழுதும்போது எங்கே அடுத்தவர்கள் எழுதிய முறையில் எழுதுகின்றோமோ, அடுத்தவரை பிரதியெடுத்து எழுதியது போலிருக்கின்றது என்று படிப்பவர்கள் நினைத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவுகளை மனம் எண்ணுகின்றது, முயற்சி செய்கின்றேன்!

m.vijiyalakshmi's படம்

நன்றாக இருக்கிறது


நன்றாக இருக்கிறது Clap


vijayalakshmi


joshi2010's படம்

மிகவும் அருமையான


6

மிகவும் அருமையான கவிதை........
"ம‌ண்ண‌து ம‌ண‌க்க மழையென‌
வின்ன‌து சிற‌க்க‌ நில‌வென‌
த‌ரணியில் சிற‌ந்த‌ த‌மிழென‌
த‌மிழே வாழ்கவென சங்கது முழங்கே!"
மிகவும் அருமை.........
"எமக்கு கவிதை எழுதும்போது எங்கே அடுத்தவர்கள் எழுதிய முறையில் எழுதுகின்றோமோ, அடுத்தவரை பிரதியெடுத்து எழுதியது போலிருக்கின்றது என்று படிப்பவர்கள் நினைத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் விளைவுகளை மனம் எண்ணுகின்றது, முயற்சி செய்கின்றேன்!"
என்னைப் பொறுத்தவரை....... இந்த அச்சம் தேவையற்றது........ ஒருவரைப் போலவே இந்த உலகில் ஏழு பேர் இருப்பதாகச் சொல்கின்றனர்..... இறைவனின் படைப்பிலேயே இப்படி என்றால்........ நம் படைப்பில் தவறில்லை....... உங்கள் கருத்துக்களை தைரியமாக, உண்மையாக வெளியிடுங்கள் தோழரே........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


rajudranjit's படம்

நன்றி நண்பரே! தங்கள்


நன்றி நண்பரே! தங்கள் கருத்துக்களை நினைவில் வைத்து முயற்சி செய்கின்றேன்!

vinoth's படம்

தமிழே வாழ்க வாழ்க


8

தமிழே வாழ்க வாழ்க வாழ்கவென‌
தரணிக்கு தமிழால் வாழ்வென‌
முரசது கொட்டி மகிழ்வோமென‌
எங்கள் தமிழ் வாழ்கவென சங்கது முழங்கே!

Clap Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

தங்களின் வாழ்த்திற்கு நன்றி


தங்களின் வாழ்த்திற்கு நன்றி விநோத்!

dharshi's படம்

(No subject)


10

Clap Clap Clap


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!