annaa's படம்

தமிழ்! தமிழ்! தமிழ்!

உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..

மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

நன்றி!

" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
http://puthuvithai.blogspot.com/

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

கருத்துகள்

uthira's படம்

மிக அருமை தோழரே


மிக அருமை தோழரே


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


annaa's படம்

மிக்க நன்றி தோழி!


மிக்க நன்றி தோழி!


annaa


annaa's படம்

சோதனை முயற்சி.


சோதனை முயற்சி.


annaa


dharshi's படம்

தோழா அண்ணாமலை... இந்தக் கவி


தோழா அண்ணாமலை... இந்தக் கவி எழுத உங்களுக்குரிய கரு உதித்த காரணம் என்னவோ?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

தோழி! இன்றைய நிலையில் இதன்


தோழி! இன்றைய நிலையில் இதன் கருத்து நோக்கம் என்னவென்று நீங்களே அறிவீர்கள்!ஆனால், இதன் வரி அமைப்பு இறுதியில் "வேண்டின்! வேண்டின்!" என வருவது, கவியரசு கண்ணதாசன் பிள்ளையார்பட்டி விநாயகரைப் போற்றிப் பாடியதன் தாக்கமே ஆகும்! அந்தப் பாடலின் வரிகள் இதோ..
"
அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை"

நன்றி கவியரசருக்கு!


annaa


chandru2110's படம்

மிகவும் பாரட்டதக்கது. வரிகள்


மிகவும் பாரட்டதக்கது. வரிகள் அருமை.


சந்துரு


annaa's படம்

மிக்க நன்றி நண்பரே!


மிக்க நன்றி நண்பரே!


annaa


annaa's படம்

சோதனை முயற்சி!


சோதனை முயற்சி!


annaa


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


annaa's படம்

மிக்க நன்றி நண்பரே!


மிக்க நன்றி நண்பரே!


annaa


nandhalala's படம்

அருமை நண்பரே...


அருமை நண்பரே...


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


annaa's படம்

மிக்க நன்றி நண்பரே!


மிக்க நன்றி நண்பரே!


annaa


annaa's படம்

தோழரே! மிக்க நன்றி!


தோழரே! மிக்க நன்றி!


annaa


inasartrcihy's படம்

அருமை நண்பரே


அருமை நண்பரே

annaa's படம்

மிக்க நன்றி நண்பரே!


மிக்க நன்றி நண்பரே!


annaa


ranjitsachin's படம்

அருமையான வரிகள்... சூப்பர்,.,


அருமையான வரிகள்... சூப்பர்,.,

annaa's படம்

மிக்க நன்றி தோழரே!


மிக்க நன்றி தோழரே!


annaa


vinoth's படம்

ஆஹா அருமை 10/10


ஆஹா
அருமை

10/10


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...