Skip to main content

தமிழீழம்

rajamuhunthan's படம்
 
 

முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்
முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம்  பிணங்கள்
முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு
முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது


yarlpavanan's படம்

இலங்கையின்
வடபுலத்தே
அடிக்கடி அடிவேண்டும்
செய்தி நாளேடு
உதயன் என்றே சொல்லலாம்!
இலங்கையில்
அடிக்கடி அடிவேண்டும்
சாவடையும்
இதழியலாளர்களும்
வடபுலத்தாரே!
இதழியலாளரின் எழுதுகோலுக்கு
அரசனும் அஞ்சுவான்...
பாரதியின் எழுத்துக்கு
பிரிட்டிஸ் வெள்ளையன் நடுங்கியதும்
நல்ல எடுத்துக்காட்டெல்லோ!
உண்மை தான்...
செய்தி நாளேடுகள் 
உண்மையை எழுதிப்போட்டால்
அரசுக்கு நெருக்கடி
அடிக்கடி வந்து சேர
தாக்குப் பிடிக்க முடியாமல்
செய்தி ஏடுகளோடு
மோதிக் கொள்வது சரியாமோ?
கத்தி விளிம்பில் (கூர் முனை மேல்)

கவிஞர் கே இனியவன்'s படம்

உரிமை கேட்டோம் மறுக்கப்பட்டது ...!
உடமைகள் இழந்தோம் உரிமைக்காக ...!
உறவுகளை உண்மை உறவுகளுக்காக ...!

எமக்கு தேவையானது இவைதான் ..!

வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல் சுவாசிக்க மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!

இவை எல்லாவற்ரையும் விட ....?

என் தேசத்தின் ஒரே ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
தலைமுடிவளருமா ..? என்று நான் ..
ஆய்வு செய்வதற்கு ...!

kumaran16's படம்
போதும் இந்தக் கல்லரைக் காவியங்கள்
வாழும் எந்தன் உள்ளுரைப் பாசங்கள்
வாழ உந்தன் நல்நிலை தேடியதால்
நாளும் கொண்டது வன்முறை வேர் விழவே

விடியலுக்காக விதைகளை யிட்டோம்
... மடிவதற்காக சிதைகளையல்ல…

கொடிகளில் பூக்கள் மலர்வது எல்லாம்
விழிகளில் கோக்கும் நீர் துளிக்கல்ல…

வழிகளைப் பார்த்து முட்புதர் நீக்கி
தடம் இடத்தானே தவறிட அல்ல…

நாளும் போர்குணம் வேர்விடா வாழ்வை
நாடும் என்பதை நினைப்பது நன்று…

வாழ்க்கைப் பக்கத்தில் குறுதியும் போதும்
வாழும் நம்பிக்கை அமைதியாய் வேண்டும்

 
Mano Red's படம்

ஈழத்து ஈரக்காற்றே, 
ஈழத்து ஈரக்காற்றே, 
என் இன மக்களை பார்த்தாயா..?? 
உதவி செய்ய நாதியற்று, 
அக்கறையால் நலம் விசாரிக்கிறேன்..!! 

என் மக்களை கொன்ற பாவியின் மேல், 
எச்சில் உமிழ்ந்தாலும், 
எட்டி மிதித்தாலும், 
பாவம் போல் அஞ்சி,நடித்து 
பதுங்கியவர்கள் நாங்கள்..!! 

பூப்பட்டால் கலங்கி விடும் என் மக்களை, 
கண்ணிவெடிக்கு பலி கொடுத்தும், 
துப்பாக்கி குண்டுகளில் பொட்டு வைத்தும், 
ஆடையின்றி அலங்கோலம் செய்தும், 
வேடிக்கை பார்த்த வேலி ஓணான்களை, 
கல்லெறிந்து துரத்த முடியாத 
கையாலாகதவர்கள் நாங்கள்..!! 

kumaran16's படம்

அனாதை மரங்களாய்
அகதிப் பூக்களாய்
இழந்தது கணக்கிலை
இருப்பதுந் தெரியலை
நெருப்புக் கோளமாய்
உருத்தும் உணர்வுகள்
இருத்துப் பார்க்கவே
இறுக்கும் வலியினால்
பொறுக்க முடியலை
வருத்தம் வறுப்பதால்
கருத்த காவியம்
வெறுத்த வாழ்க்கையாய்
இருக்கும் பொதிலே
தடுக்கா அறிவது
எடுக்காதிருப்பது
என்ன என்பதை
விடுத்துப் போனதால்
எண்ணிப் பார்ப்பது
நன்மை தருமென
நினைத்துப் பார்ப்பதால்
குறைந்தா போகுவோம்

காக்கிறேன் பேரிலே
தாக்கிடுந் தர்மமாய்
நோக்கியே எழுவது
நோக்குமோ நல்வழி

கவிஞர் கே இனியவன்'s படம்

எமக்கு ஏற்பட்ட காயங்களை ..
கண்ணீரால் கழுவுகிறோம் ...
காயங்களுக்கு தேவைப்படுவது
முதலுதவிதான் ...என்றாலும்
சத்திரசிகிச்சையும் தேவைதான்..
நிரந்தரமாக குணமாக ...!

ரெளத்திரன்'s படம்

பண்டைப் பெருமை யாவையுமே‍ -க்ட்டிப்

====பரண்மேல் தூக்கிப் போட்டுவிட்டுத்

தொண்டை கிழியக் கத்துகிறீர்‍-உம்மால்

====துலங்கும் நன்மை ஏதுமிலை

அண்டை நாட்டில் அனுதினமும்‍- நம்

====அருமைச் சோதர் துடிக்கின்றார்

கண்ட‌ தல்லால் என்செய்தீர்? =தமிழ்க்

====குலமென் றெங்கும் சொல்லாதீர்!

 

வீர மற்றப் பேடிகளே -என்றும்

====வெட்டிப் பேச்சில் வல்லவர்கள்

சார‌ மென்று ஏதுண்டு?- வெறும்

====சக்கை தமிழர் கதைகள்காண்

சீறும் புலிகள் என்பவர்யார்? -புன்மைச்

====சிறுவ‌ ளைவாழ் எலிகளெனக்

yarlpavanan's படம்

 

நாட்டுக்குள்

எதிரியை நுழைய விடாது

தாக்க வரும்

எதிரிப்படையை விரட்டி விட

நாட்டின் எல்லைகளிலே

காத்திருக்க வேண்டியவர்களே

படையினர் (இராணுவம்)!

ஆனால், பாருங்கோ

அடிச்சுச் சொல்றேனுங்கோ

மக்களில்லா இடம் பார்த்து

இருக்க வேண்டியவர்களே

படையினர் (இராணுவம்)!

உலகமே

ஈழத்தைப் பாரு...

தமிழ் மக்களின் நிலம் பறித்து

சிங்களப் படை

குடியிருப்பதால் தானே

உலகெங்கும்

இருநூற்றைம்பது நாடுகளில்

ஈழத் தமிழர் காலடி வைத்தனர்!

இன்றைக்கு(10/03/2013)

யாழ் பத்திரிகைகளில்

daniskarank@yahoo.com's படம்

உதிர்க்கப்படும் பூக்களும்,
உடைக்கப்படும் மனநிலையும்.

                                 

பூக்களின் புன்னகை விரிப்பால்
புதுப்பொலிவையே கண்ட மரம்
தன் பூக்களையெல்லாம்
மொட்டிலேயே உதிர்த்துவிடுகிறது - இல்லை
உதிர்க்கப்பட்டுவிடுகிறது.

விருட்சங்கள் வேரூன்றிய நேற்று
வண்டுகள் வந்து சேரும்வரை
தண்டுடன்தான் இருந்தன பூக்கள் - இன்று
குண்டுகள் தாங்கிய பூக்களோ
குருதி படிந்த இதழ்களுடன்
தண்டுகள் இழந்து தவிக்கின்றன.

சில பூக்கள் கிழிந்த இதழ்களுடன்
அழிந்த கோலங்களாய்
அலை மோதுகின்றன.

Pages