என் இனிய தமிழ் நண்பா!
"எத்தனை தவம் செய்து,
தமிழனாய்ப் பிறந்தனை "
என்பதை அறிவாயோ?
தவப் புதல்வனே,
தரணியில் நிறையும்
அவப்பெருக்கை .....
அன்புப் பெருக்கால். பண்புப் பெருக்கால்,
அறிவுப் பெருக்கால், ஆற்றலின் பெருக்கால்,
தடயம் சிறிதும் இன்றி ....நீக்குவாய்!
ஆக்குவாய் அகிலத்தை,
அன்பிற்கு உறைவிடமாய்....
அமைதியின் பொலிவிடமாய் ......!
பாலு குருசுவாமி
(3 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by malathi on திங்கள், 13/06/2011 - 12:03am.

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல







