மீண்டும் சுனாமி ! மீளட்டும் மனிதர்கள் !
(கவலையுடன் ஓர் கவிதை - வேதாந்தகவியோகி நாகசுந்தரம்)
மீண்டும் சுனாமி !
ஜப்பானில் மீண்டும் சுனாமி !
ஜனித்தது சுனாமி என்மனதிலும் !
அதிர்ந்து நிலம் மட்டுமல்ல !
மக்களின் மனம் கூடத்தான் !
நிலவு நெருங்கினால்
திரைகடல் பொங்குமாம் !
நிலவு மனதின் அரசு ! அதனால்தான்
மனமும் பொங்குகிறது !
பொங்கிய மனதில்
தங்கிய சிந்தனை !
மனதே நீ இரக்கப்படு !
மரணித்த மனித குலத்தை பற்றி !
உறவென்று நினைப்பாய் !
ஜப்பான் மக்கள்
உழைப்பால் உயர்ந்தவர்கள் !
உயரம் குறைந்தாலும்
உழைப்பால் உயர்ந்தவர்கள் !
ரோபோட்டுக்களை படைத்தவர்கள்
இன்று ரோட்டுக்கு வந்தனரோ ?
அரட்டை அடித்துக்கொண்டு
கிரிக்கெட்டை பார்க்காமல்
அரண்டது உலகம் இன்று !
மனித குலமே !
நீ சுயநலத்தை சிறிது ஒதுக்கிவிடு !
பாதித்த மனித குலத்தைப்
பார்த்தாவது பயப்படு !
இறைவனே ! ஏன் இந்த கொடூரம் ?
உன்னை கருணைக்கடல்
என்று வர்ணிக்கிறார்கள் !
உப்புக்கடலில் மட்டும் சுனாமி !
உன் கருணைக்கடலில் என்று சுனாமி?
வைராக்யம் என்ற நிலநடுக்கம்
எங்கள் மனத்தில் வந்தால்தானோ
உன் கருணை சுனாமி பொங்கும் ?
உன் கருணை சுனாமியால்
எங்கள் காமக்ரோத கட்டிடங்கள்
கலைந்து விழட்டும் !
கூட்டம் கூட்டமாய் மனித குலத்தை
நீ எங்கே கொண்டு செல்கிறாய்?
பூமி பாரம் குறை என்பாய் !
பூமி பாரம் குறைய உனக்கு
பூக்களைப்போன்ற
மனிதர்கள்தானா கிடைத்தனர் ?
வேதத்தை நம்பி வாழ்பவர் நாங்கள் !
ஸ்ரீருத்ரம் கூறுகிறதே !
நீ மிகுந்த கோபக்காரன் என்று !
உன் கோபத்திற்கு வணக்கம் !
அப்படித்தானே அது அழைக்கிறது !
உன் கோபத்தின் சீற்றம் இன்று
சுனாமியாய் சீறியது !
உந்தன் அருகில் இருக்கும்
சக்தி சற்று நகர்ந்தாளோ ?
அழிக்கும் உனது ஆர்வம்
அகலவில்லை போலும் !
மனித குலமே இனிமேலாவது
நீ விழித்துக்கொள் !
சக மனிதனை சகோதரனாக நினை !
இல்லாவிட்டால் சுனாமியால் சங்கடம்தான் !
ஹரதி நிமேஷாத் காலத் ஸர்வம் என்றார் சங்கரர் !
இருக்கும்போதே இறைவனை நினைத்திடு !
காலம் கடத்தினால்
கொண்டுபோகும் சுனாமி !
யமஹா யமனாஷி என்று பெயர் வைத்ததால்
என்னமோ யமனின் ஆக்ஷி
சுனாமியாய் வந்ததோ ?
அணுகுண்டு போட்டபோது
அழிந்து போன ஜப்பான்
நிமிர்ந்து நிற்பதற்குள்
நமன் வந்தான் சுனாமியாய் !
ஆழ்கடலின் மீது எனக்கு
அளவற்ற கோபம் !
சுனாமியாய் சீறியதால் !
உன் அடியில் உள்ள
முத்துக்கள் போதவில்லை போலும் !
அதனால்தான்
முத்தான மனிதர்களை
உன்னில் மூழ்கடிக்கிறாயோ ?
நீ என்ன சோதனை செய்தாலும்
சோர்ந்திடமாட்டார் ஜப்பானியர் !
ஏனென்றால்
அவர்களுக்கு
சுனாமியிலேயே
சும்மிங் போட்டு பழக்கம் !
அவர்கள் சோர்ந்திடாதிருக்கு
அகில உலகமும் அவர்களுக்கு
ஆறுதல் சொல்லுவோம் !
சேர்த்து வைத்த சொத்தும்
சீறிப்பாயும் காரும்
ஒரு நொடியில் அழிந்ததே !
ஏ மனமே இதைக்கண்டும்
உனக்கு ஆசை ஏன் போகவில்லை ?
பர்த்ருஹரியின் வைராக்யம்
பட்டபின்னும் வரவில்லையா?
மனித நேயத்தை
மறந்திடாமல்
திறந்த மனதோடு
தீர்மானம் செய்யவேண்டும் !
அன்பும் உதவியும்
சக மனிதருக்கு செய்ய வேண்டும் !
பகைமை எண்ணமதை
போட்டுவிடு சுனாமி அலையில் !
நாகசாகியில் நலிந்து போனவர்கள்
தாகத்தோடு தரணியில்
தலைநிமிர்ந்து நிற்கவில்லையா ?
அதுபோல்
இந்த பேரழிவின் பின்னரும்
அவர்கள்
சுறுசுறுப்பாய் சுழன்றிடுவார் !
நம்பிக்கை கொண்டு விடு !
நமனை துரத்தி விடு !
கனவு காணு என்றார் கலாம் !
ஜப்பானியர் புதிதாக ஜனித்திடுவார் !
இக்கனவு கனிந்திடட்டும் !
துக்கம் மறையட்டும் !
துணைசெய்வாள்
திரிபுரையும் !
அம்மா நீ அகலாதே சிவனைவிட்டு !
சிறிது அகன்றாலும்
சிதைக்கின்றார் சுனாமியால் !
அருகில் நீ இருந்தால்
அழிந்திடுமோ உலகம் ஆழியினால் !
அதனால்
அம்மா நீ அகலாதே சிவனைவிட்டு !
நீ கடைக்கண்ணால் பார்த்துவிட்டால்
நீள் உலகம் நன்மை பெறும் !
ஊழி வெள்ளம் கூட
தாழியில் அடங்கி விடும் !
உன் கடைக்கண் பார்வை பட
உண்மையாய் வேண்டுகிறோம் !
ஊக்கம் நாங்கள் பெற
உன் அருளை வழங்கிவிடு !
கருத்துகள்
நல்ல கருத்துக்கள்
நல்ல கருத்துக்கள்
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
"ஆழ்கடலின் மீது எனக்கு அளவற்ற
"ஆழ்கடலின் மீது எனக்கு
அளவற்ற கோபம் !'
பூமியை நாம் சீரழித்தால் பாவம் கடல் என்ன செய்யும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...





