kumaran's படம்

பூவைப்போல சிரிக்க வேணும் பாப்பா-நீ
புகழ் பெறவே வளர வேணும் பாப்பா!
நல்லவற்றைப் படிக்க வேணும் பாப்பா-நீ
நடக்க வேணும் அதுபோல பாப்பா!

அன்னை தந்தை தெய்வமுனக்கு பாப்பா-நீ
அவர்கள் பாதம் பணிய வேணும் பாப்பா!
கூடி வாழப் பழக வேணும் பாப்பா
நம் கூட்டுறவே நாட்டுயர்வு பாப்பா!

நமது நாடு நமது கண்ணே பாப்பா-நீ
நாடு உயர உழைக்க வணும் பாப்பாஆ
உலகம் வியக்க உயர வேணும் பாப்பா-நீ
உறுதியோடு வெற்றி பெறுக பாப்பா!

நன்றி; நண்பர் கே. பெரியசாமி-உறையூர்

இத்தளம் சிறுவர்கள் (மட்டும்) படிக்கும் தளமாக மாற்றப்பட்டுவிட்டதால் இந்த சிறப்புக் கவிதை. நன்றி. bye

5.85714
Your rating: None Average: 5.9 (7 votes)

கருத்துகள்

uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


kumaran's படம்

நன்றி.


நன்றி.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.