Skip to main content

கொடிய கூட்டமானோம்.

URI: http://tamilnanbargal.com/node/38818
கருத்துகள்: 16Likes: 3648 viewsசிறப்பு பதிவு

கொடிய கூட்டமானோம்.

daniskarank@yahoo.com's படம்

பிற உயிர் கொன்று, உடல் திண்று
நம் உடல், உயிர் வளர்த்தோம்
ஆடு,மாடு, கோழி உண்டு உலவலானோம்,
அன்பற்ற அரக்கர் கூட்டம் நாமனோம்.

ஒன்றானோம் ஒற்றுமை கண்டோம்,
ஊணுண்ணி என்ற தலைப்பின் கீழானோம்.
உடல் வளர்க்க பிறவுயிர் பறித்தோம்;
ஊனுடல் உண்டே நம் உடல் வளர்த்தோம்.

மானிடர் வாழ மானம் கேட்டோம்;
மரியாதை தானும் கேட்டோம்,
மண்புளுவையும் ஊசியில் கோர்க்கச்செய்தோம்;
மற்ற விலங்கெலாம் மரிக்கச்செய்தோம்.

காட்டு விலங்கையும் களவில் உண்டோம்;
வீட்டில் வளர்த்ததையும் வெட்டி உண்டோம்.
மீனிடம் தேடும் மானிடமானோம்; ~ அவை
வாழிடமெலாம் வலை விரிக்கலானோம்.

தன்னுயிர் போலதான் மண்ணுயிர் எனமறந்தோம்,
மண்டியிட்டு மகிழும் மான்,மரை மகிழ்ச்சி மறுத்தோம்.
பண்ணை பண்ணையாய் பறவை வளர்த்தோம்;
தன்னை வளர்க்கவே மண்ணில், மாற்று உயிர் வளர்த்தோம்.

கட்டிடங்கள் கட்டியதில் கடைகளிட்டோம்;
கடைதனில் இரை இறைச்சி தூக்கிலிட்டோம்.
காசி,பணம் தேட காசினியில் உயிர் கொன்றோம்,
கொலைப்பசி தீர்க்கும் கொடிய கூட்டம் நாமானோம்.

கொன்றால் பாவம் என்றோர் நாமானோம்;
அதை தின்றால் தீரும் என்றோரும் நாமாவோம்.
ஆடு,மாடு மரிக்க முன்னின்றோம்;
அவைபடும் துடைக்க மறந்து போனோம்.

மகிழ்ச்சி பொங்கும் நிகழ்ச்சியெங்கும்
இறைச்சி உண்டோம், இன்பம் கண்டோம்.
அவை கூடும் நேரமெலாம், ~ மெல்ல
உயிர் கொன்றோம், ஊன் உணவுண்டோம்.

சிறு உயிர் வாழுமிடமெலாம் சித்திரவதை செய்தோம்,
கடல் நீரில் கூட கரைவலை மீன் கொய்தோம்.
தொந்தி வளர்க்க தொடர்ந்து நின்றோம், ~ மற்ற
உயிர் வளர்க்க மறந்து நின்றோம்.

பட்டுப் பூச்சியையும் பாவடை மேல்கட்டினோம்;
மாட்டுத்தோலையும் பாதணியாய் கட்டினோம்.
மண்ணுயிர் மதியா மக்கர் நாமானோம். ~ மண்ணில்
தன்னுயிர் காக்க விண்ணுயிரையும் தாக்கியோரானோம்.

நாமும் விலங்குதானே ஏன்வில்லன்கள் ஆனோம்?......

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

Ponvannan's படம்

தானாக உண்ர்ந்தால்தான் சீவகாருண்யத்தின் அருமை புரியும். பிறவுயிரைக் கொன்று தன்னுயிர் வளர்க்கும் மிருகஙகளிடையே மனிதனும் அதே குணத்துடன் வாழுகிறான் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. நாமும் விலங்குதானே ஏன் வில்லன்கள் ஆனோம்?......என்று வினவப் பட்ட கேள்விக்கு விடையளிக்கத்தான் யாராலும் முடியுமா?

வாழ்த்துக்கள் டணிஸ்கரன். சிறப்பாக எழுதியுள்ளீர்கள். என் பாராட்டுக்கள்.

joshi2010's படம்

மிகவும் அருமையான கவிதை நண்பரே

விடையளிக்க முடியாத கேள்வியுடன் கவிதையை முடித்துள்ளீர்....

என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com

rajudranjit's படம்


நண்பரே அருமையிலும் அருமையென‌ இக்கவிதை மானுடத்தின் மடமையை பறைசாற்றியுள்ளது பாராட்டுக்குறியது!

ஒவ்வொரு விலங்கினமும் அதன் நடைமுறையிலும் உணவுப் பழக்க‌ வழக்கங்களிலும் ஒன்று போலிருக்க‌, மனிதன் மட்டும் அசைவம் சைவம் என‌ இருபிரிவுகளாய் வாழ்கின்றான்,

திருவருட்பிரகாச‌ வள்ளலார் அவர்களின் ஜீவகாருண்யம் இங்கு பிரதிபலிப்பது அருமை,

"உண்டு கொழுக்க‌ தன்னுடல் உண்பானோ" என்ற‌ வரிகளை எங்கோ படித்த‌ ஞாபகம் எழுகின்றது!

vinoth's படம்

     

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

காலம் கடந்து வரும் கருத்துக்கு மன்னிக்கவும்.. கவிதை அருமையிலும் அருமை... வாழ்த்துக்கள்.                             

நட்புடன் பூங்கோதை

Rajaramani's படம்

 // மீனிடம் தேடும் மானிடமானோம்; ~ அவை
வாழிடமெலாம் வலை விரிக்கலானோம். //... 

அருமையான வரிகள்...  நாம் உண்டு வாழவில்லை...  கொன்று வாழ்கிறோம் என்பதை நெத்தியடியாய் கூறியிருக்கிறீர்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்று காகம் கொத்திய 
தமிழர் இறைச்சிகள் மலிந்த நாட்டில்
உயர்க்கொலைக்கெதிராக
குரலெழுப்பும் பாவைத் தந்த
நண்பருக்கு நன்றி!
சிறந்த பாவரிகள்