எல்லாம் தலையெழுத்து உண்மையா சொல்லுங்க தோழரே! என் தோழர்களே! மது விற்று காசு சேர்த்து அரசின் மறுவாழ்வு இல்லம் சொல்லுக்கு சொரணையில்லை என் தோழர்களே! கோடிப் பணம் கொட்டி மன்றத்தில் நுழைந்தவர்களுக்கு மாடிமேல மாடி வச்சு வீடுவுள்ள வறுமையாளர்களுக்கு சொகுசுக் காருக்குள்ளமர்ந்து பவனிவரும் பாவங்களுக்கு ஒரு மடிகணினி வாங்குவதற்கு வழியில்லா ஏழைகளைப் பாரு! வயிறு ஒட்டி வசதியா வரப்புமேல தலை சாய்த்து கஞ்சிக்கு கையேந்தும் விவசாயி நிலைமை பாரு வீடுக்கட்ட நிலத்தை வித்து வருந்தாத குடும்பமிருக்க கோட்டு போட்ட கோமாளி பாட்டுக்கு ஆட்டம் பாரு! அடிச்சக் காத்து "தானே" அது யாரு செஞ்ச குற்றம் அரசின் கையை பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம் பாவப்பட்ட உறுப்பினருக்கு பணமில்லை வங்கியிலே வெள்ளை வேட்டி மடிப்புக்கு வரக்கூடாதே பங்கம்! அண்ணாயிருந்தாலும் புரட்சித் தலைவரிருந்தாலும் கண்ணீர் விட்டழுதிருப்பார் கவலைப்பட்டு நொந்திருப்பார் பலகோடிக் கொட்டி கல்லறையைப் பழுது பார்ப்பதற்கு வாடிவதங்கும் மக்களுக்கு மகிழ்ச்சியிது கொடுக்குமோவென! மாடா உழைச்சு ஓடாத் தேய்ஞ்சு போன உழைப்பாளி மாத்துக் கோவணமில்லா மகத்துவம் யாரறிவா கன்னத்தில் கைவைத்து வாக்களித்த மக்கள் பார்த்திருக்க சாக்குபோக்கு சொல்லி வெற்றி நடைபோடுது அரசாங்கம்! தாலிக்கு தங்கம் கொடுத்து சோம்பேறியாக்கி தொலைகாட்சி பெட்டிக்கு இது நல்லதென்றாக்கி மின்சாரமில்லாம மிக்சி கிரைன்டர் ஓடுதுங்க சம்சாரம் கையிலுள்ள மாவிலே விலைவாசி தெரியுதுங்க! ஏழைகள் வாழும் நாடு ஒளிருதுன்னு சொன்னவங்க ஓடிவிட்ட போதிலும் ஓலக்குரலுக்கு வக்காலத்து வாங்க தானமாக வந்த மாடு தவிக்குதுங்க புல்லில்லாம கவனமா இருக்குறாங்க நம்மநட்டு மக்கள் வாக்களிக்க! தேர்தலுக்கு தேர்தல் பணம் புரளும் நாடுதாங்க இலஞ்சத்தை ஒழிக்க மக்களுக்கு இலஞ்சமுங்க அம்மா ஐயா யார் வந்தாலும் இதுதான் கதியென்றாச்சு ஒருபக்கம் குரலொன்று நாம் தமிழரென்குதுங்க! சாதிய மறக்க முடியல சாமிக்கு கும்பிடுபோட பேதிக்கு மாத்திரை மருத்துவமனையில் இல்லைங்க படிப்புக்கு வழியில்ல பகுத்தறிவு பேசுதுங்க ஒரு கூட்டம் உண்மையை சொல்லுறேங்க என்மேல கோவமேனுங்க? தேசம் முன்னேற திடமான கரமில்லை பாருங்க திருத்த முயல கரத்திற்கு வலுவில்லை வெட்கமுங்க இப்போது காலமது சர்னு ஓடுதுங்க வேடிக்கையே பார்க்கின்ற மக்களோ கதறக்கதற துடிக்குதுங்க! எத்தனை நிறமிருக்கோ அத்துனைக்கும் வெகுமதியாய் துண்டு துண்டா துணி பறக்க பேச்சிலே அனல் வீச குழப்பத்தில் முழிபிதுங்கி தொண்டையை நெறிக்குதுங்க பத்திரிக்கை செய்தியிலே அண்டப்புழுகு அம்பலமுங்க! நாடென்ன செய்ததென்னு கேட்கக் கூடாதுங்க தலைவருக்கு கோவம் வந்தா சாட்டையை சுத்துவாங்க பாவப்பட்ட ஏழைகள் பவனி வரும் பழந்தமிழ் நாடுங்க சோத்துக்கு ரோஷமென்ன கிடக்குது நிதியில்லா நாட்டிலே! வேஷம் போட்டு மோசம் பண்ணும் அரசியல் பாருங்க பிழைப்புக்கு வழிக் கேட்டா கோஷம் போட கிடைக்குமாம் கேடுகெட்டு போனதாரு கேட்டுபுட்டா கோபப்பட்டு அடாவடிஇடிஅடித்து தினாவட்டு முட்டுக்கட்டையாச்சுதுங்க தண்ணிய குடிச்சுபுட்டு தனி வீரம் பேசுதுங்க கேடிங்க காவலே பயிரையும் மேயுதுங்க கேட்பதற்காருமில்லைங்க உரிமைக்கு குரல்கொடுக்க எங்க தலைவருமில்லைங்க அம்மான்னு கூப்பிட்டா கோட்டைக்கும் கேட்கலீங்க! விலைவாசி ஏற்றமோ அது பொருளாதர முன்னேற்றமாம் ஆளுகின்ற வர்க்கத்தில் அடியாட்கள் வலம் தொடர வேடிக்கைப் பார்ப்பதற்கு காவல்காரன் உறுதுணைங்க வாக்களிக்கும் வரை எங்க காலு பொன்னாயிருந்ததுங்க! தொகுதி பணி கேட்டுபுட்டா தர்ம அடி கொடுப்பாங்க பொன்னான எங்க காலு புண்ணாகி போச்சுதுங்க எல்லாம் தலையெழுத்து இரத்தம் அசுத்தமுங்க அருவா வெட்ட சுத்தி நசுக்குமுங்க வேடிக்கைதானுங்க! எம்மேல கோபம் வேண்டாமுங்க கேளுங்க தோழர்களே நாட்டிலே இப்படிதாங்க நடக்குது நிலைமைங்க பாருங்க வட்டியில சோறு இருந்தா வயித்துக்குள் போடுவேனுங்க ஊரெல்லாம் இதே பேச்சுங்க உங்க காதுல போட்டேனுங்க! என்றும்: சுஷ்ருவா! நாட்டுப்புற கவிதைகள்Nattupura Kavithaigal Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 979 views கருத்துகள் நாட்டு நடப்புகளை நறுக்காகச் நாட்டு நடப்புகளை நறுக்காகச் சொன்னீர்... நாடு நலம் பெற உரிய இடத்தில நல்லவர் அமர வேண்டுமே! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments நல்லதை செய்பவன் நேர்மையானவன் நல்லதை செய்பவன் நேர்மையானவன் என நம்பி பதவியில் அமர்த்தினால் நேற்றுவரை நாம் எப்படியிருந்தோம் இனிமேலும் அப்படி இருக்கக் கூடாது என அவனும் ஆசையில் சம்பாதிக்கும் எண்ணத்தில் இறங்கி பழையவை மறந்து சொத்து சேர்க்க முயல்கின்றான் என்ன செய்ய அன்பரே! நல்லவன் என்றால் நான் ஒருவன் தான் எனது கண்ணுக்குத் தெரிகின்றது! Log in to post comments தண்ணிய குடிச்சுபுட்டு தனி தண்ணிய குடிச்சுபுட்டு தனி வீரம் பேசுதுங்க கேடிங்க காவலே பயிரையும் மேயுதுங்க கேட்பதற்காருமில்லைங்க உரிமைக்கு குரல்கொடுக்க எங்க தலைவருமில்லைங்க அம்மான்னு கூப்பிட்டா கோட்டைக்கும் கேட்கலீங்க! ============ நல்ல பதிவு ========================= Log in to post comments தற்போதைய ஆளும்கட்சியின் தற்போதைய ஆளும்கட்சியின் தொண்டர்கள் பரவலாக தமிழகம் முழுதும் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை நண்பரே! காவல் நிலையம் சென்றால் அவர்களோ வட்டம்,மாவட்டம்,ச.ம.உ என அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தவறு செய்தவர்களை கண்டுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்கின்றார்கள், அதற்கு ஆளும் கட்சியின் எழுதப்படாத சட்டம் கைக் கொடுக்கின்றது தாங்களெல்லாம் அறியாதது இல்லை நண்பரே! நேர்மையான ஆட்சி இப்படியா இருக்கும்? தலைமை இவைகளை கண்டும் காணாமல் விடுவதால் வந்த வினை! Log in to post comments கேட்கிறோம் பதில் சொல்லத்தான் கேட்கிறோம் பதில் சொல்லத்தான் யாருமில்லை வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments மேடைப் பேச்சைக் கேட்டுக் கை மேடைப் பேச்சைக் கேட்டுக் கை தட்டி கை தட்டி வீணாப் போனவர்கள் நமது இந்திய இளைஞர்கள், அன்றும் இன்றும் மாறாமல் அப்படியே அந்தக் கலாச்சாரம் கடைப்பிடிக்கப் படுகின்றது, எமது இளைஞர்களுக்கு சரியான வழிக்காட்டிகள் இல்லை உலகில் எங்கும், அதனால் தான் அன்றைய பெர்னாட்ஷா, சர்ச்சில்,லிங்கன் போன்றோரின் கருத்துக்களை இன்றளவும் மேடைப்பேச்சுக்களில் இடைச்சொருகல்கள் செய்கின்றார்கள், எது பகட்டுக்கு உள்ளது, எது பாதுகாப்பானது என அறிவுறுத்துவோராகிய பெற்றோர்களும் வேலை பளு காரணம் குழந்தைகளுக்கு நல்லதை சொல்லவோ, திருத்தவோ முயற்ச்சி செய்ய மறந்து போயுள்ளனர், ஒரு கை தட்ட ஓசை எழாது நாம் ஏன் பிறந்தோம் என்ற கேள்வி ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் எழ வேண்டும் காட்டாற்று வெள்ளத்தை முறையாக திருப்பிவிட அது நிலங்களுக்கு பாய்ந்து பலன் தரும் அக்காரியத்தை முன்னின்று செய்வோரை யார் ஆதரிப்பார்கள்? Log in to post comments வணக்கம், தங்கள், எங்கள் வணக்கம், தங்கள், எங்கள் நாட்டு நடப்பையெலாம் தங்கத்தமிழால் தவழ விட்டுள்ளீர். அத்தனையும் அருமையான வரிகள். நன்றி. உரிமையோடும் உணர்வோடும் இளங்கவி. Log in to post comments நன்றி நண்பரே! நன்றி நண்பரே! Log in to post comments
நாட்டு நடப்புகளை நறுக்காகச் நாட்டு நடப்புகளை நறுக்காகச் சொன்னீர்... நாடு நலம் பெற உரிய இடத்தில நல்லவர் அமர வேண்டுமே! யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
நல்லதை செய்பவன் நேர்மையானவன் நல்லதை செய்பவன் நேர்மையானவன் என நம்பி பதவியில் அமர்த்தினால் நேற்றுவரை நாம் எப்படியிருந்தோம் இனிமேலும் அப்படி இருக்கக் கூடாது என அவனும் ஆசையில் சம்பாதிக்கும் எண்ணத்தில் இறங்கி பழையவை மறந்து சொத்து சேர்க்க முயல்கின்றான் என்ன செய்ய அன்பரே! நல்லவன் என்றால் நான் ஒருவன் தான் எனது கண்ணுக்குத் தெரிகின்றது! Log in to post comments
தண்ணிய குடிச்சுபுட்டு தனி தண்ணிய குடிச்சுபுட்டு தனி வீரம் பேசுதுங்க கேடிங்க காவலே பயிரையும் மேயுதுங்க கேட்பதற்காருமில்லைங்க உரிமைக்கு குரல்கொடுக்க எங்க தலைவருமில்லைங்க அம்மான்னு கூப்பிட்டா கோட்டைக்கும் கேட்கலீங்க! ============ நல்ல பதிவு ========================= Log in to post comments
தற்போதைய ஆளும்கட்சியின் தற்போதைய ஆளும்கட்சியின் தொண்டர்கள் பரவலாக தமிழகம் முழுதும் மது அருந்திவிட்டு செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை நண்பரே! காவல் நிலையம் சென்றால் அவர்களோ வட்டம்,மாவட்டம்,ச.ம.உ என அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தவறு செய்தவர்களை கண்டுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்கின்றார்கள், அதற்கு ஆளும் கட்சியின் எழுதப்படாத சட்டம் கைக் கொடுக்கின்றது தாங்களெல்லாம் அறியாதது இல்லை நண்பரே! நேர்மையான ஆட்சி இப்படியா இருக்கும்? தலைமை இவைகளை கண்டும் காணாமல் விடுவதால் வந்த வினை! Log in to post comments
கேட்கிறோம் பதில் சொல்லத்தான் கேட்கிறோம் பதில் சொல்லத்தான் யாருமில்லை வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மேடைப் பேச்சைக் கேட்டுக் கை மேடைப் பேச்சைக் கேட்டுக் கை தட்டி கை தட்டி வீணாப் போனவர்கள் நமது இந்திய இளைஞர்கள், அன்றும் இன்றும் மாறாமல் அப்படியே அந்தக் கலாச்சாரம் கடைப்பிடிக்கப் படுகின்றது, எமது இளைஞர்களுக்கு சரியான வழிக்காட்டிகள் இல்லை உலகில் எங்கும், அதனால் தான் அன்றைய பெர்னாட்ஷா, சர்ச்சில்,லிங்கன் போன்றோரின் கருத்துக்களை இன்றளவும் மேடைப்பேச்சுக்களில் இடைச்சொருகல்கள் செய்கின்றார்கள், எது பகட்டுக்கு உள்ளது, எது பாதுகாப்பானது என அறிவுறுத்துவோராகிய பெற்றோர்களும் வேலை பளு காரணம் குழந்தைகளுக்கு நல்லதை சொல்லவோ, திருத்தவோ முயற்ச்சி செய்ய மறந்து போயுள்ளனர், ஒரு கை தட்ட ஓசை எழாது நாம் ஏன் பிறந்தோம் என்ற கேள்வி ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் எழ வேண்டும் காட்டாற்று வெள்ளத்தை முறையாக திருப்பிவிட அது நிலங்களுக்கு பாய்ந்து பலன் தரும் அக்காரியத்தை முன்னின்று செய்வோரை யார் ஆதரிப்பார்கள்? Log in to post comments
வணக்கம், தங்கள், எங்கள் வணக்கம், தங்கள், எங்கள் நாட்டு நடப்பையெலாம் தங்கத்தமிழால் தவழ விட்டுள்ளீர். அத்தனையும் அருமையான வரிகள். நன்றி. உரிமையோடும் உணர்வோடும் இளங்கவி. Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162