annaa's படம்

காதல் - 1

காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்
கனவுக ளிறைத்தல்காண்!
காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
காட்சியாய்த் தெரியுங்காண்!
காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
கருத்தினில் தோன்றுங்காண்!
காதல் கொண்டிடக் கனவுகள் கிளைத்திடக்
கதவுகள் திறக்குங்காண்!

காதல் - 2

காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
கதவுகள் திறக்காதோ!
காதல் கொண்டிடக் கதிரவ னொளியென
கண்களு மொளிராதோ!
காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்
கவிகளும் முளைக்காதோ!
காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்
கனவுகள் இனிக்காதோ!

இப்பா அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய மண்டிலம் வகையைச் சேர்ந்தது..
இது நான் எழுதி பிறகு தமிழறிஞர் ஒருவரால் திருத்தப்பட்டது...
எனவே, பாதி நான் . பாதி அவர்.. நன்றி.. தமிழறிஞர் அவர்களுக்கு...
விளக்கங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.. நன்றி..!!
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/2010/03/5.html

6
Your rating: None Average: 6 (5 votes)

கருத்துகள்

rajesh_7885's படம்

உன்னோடு வாழ்வதற்கும் உன்


உன்னோடு வாழ்வதற்கும் உன் நினைவுகளோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம் தான் உண்டு
உன்னோடு வாழ்ந்தால் அது வரம்
உன் நினைவுகளோடு வாழ்ந்தால் அது தவம்

rajesh_7885's படம்

வேண்டாம் என்று சொல்லி எனை


வேண்டாம் என்று சொல்லி
எனை விலகி நின்ற
நொடிகளை
நினைத்துப்பார்க்கிறேன்

இல்லை என்று சொல்லி
இதயத்தின் இயக்கம்
நிறுத்திய கணங்களை
நினைத்துப்பார்க்கிறேன்

வலிக்கவே இல்லையே ????
இன்னுமா - நீ
என் மீது கொண்ட
அந்த ஏதோ ஒன்று

உயிரோடு இருக்கிறது

annaa's படம்

தோழரே..!! இன்னும் உங்கள்


தோழரே..!! இன்னும் உங்கள் எண்ணங்களைக் க‌விதைப்ப‌குதியில் ப‌திவ‌த‌ன் மூல‌ம் அனைத்து இணைய‌ உல‌வ‌ர்க‌ளும் ரசிக்கும்படி செய்ய‌லாமே..!!
நன்றி தோழரே..!!


annaa


ranjitsachin's படம்

தங்கத் தமிழ் வாழ்க...


தங்கத் தமிழ் வாழ்க...

annaa's படம்

மிக்க நன்றி தோழரே..!!


மிக்க நன்றி தோழரே..!!


annaa


chandru2110's படம்

மிகவும் எளிமையான தமிழில்


மிகவும் எளிமையான தமிழில் உள்ளது.


சந்துரு


annaa's படம்

மிக்க நன்றி தோழரே..!!


மிக்க நன்றி தோழரே..!!


annaa


dharshi's படம்

நல்லா இருக்கு தொடருங்கள்


நல்லா இருக்கு தொடருங்கள் உங்கள் பணியை...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

தமிழ்த்தாயின்


தமிழ்த்தாயின் அருளிருந்தால்
நம் பணிசிறக்கும் தோழி..!!


annaa


joshi2010's படம்

"காதல் கொண்டிடக் காண்பவை


"காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
காட்சியாய்த் தெரியுங்காண்!
காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
கருத்தினில் தோன்றுங்காண்!"

மிகவும் அருமையான வரிகள்............ காதல் கொள்ளும் போது மனிதனும் மகாதமாவாக மாற முடியும்.......
இதனைத் தான் " காதலி தன் கடைக்கண் காட்டி விட்டால், இமயமும் கடுகளவாம்" என்பதோ........


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


annaa's படம்

காதல் கொண்டால் இப்படியெல்லாம்


காதல் கொண்டால் இப்படியெல்லாம் கூட நடக்கலாம்..!!
மிக்க நன்றி நண்பரே..!!


annaa