காதலனான சில மணித்துளிகளில்!
காதலே எங்கிருக்கிறாய்? அவசரம்.
உடனடியாய் நான் கவிஞனாக வேண்டும்.
அரை நொடிப்பார்வை தான்;
பற்றி எரிகிறேன் பாஸ்பரமாய் நான்
நீ என் மனதின் ஆழம் பார்த்தாய்,
நான் உன் கண்களின் ஆழம் இரசிக்கிறேன்.
ஆழம் தெரியாமல் தவிக்கிறது காதல்
நீ எனக்காவள்
மணியடித்து சத்தியம செய்கிறது இதயம்
என் முன்பாக கடிகார முள்ளாய்
நீ நகரும் போதெல்லாம்
சொல்லாத காதல் செல்லுமா? செல்கிறது
எனை ஓரக்கண்ணால் இரசித்தபடி நீ
உன் நேர்கொண்ட
பார்வையில் தடுக்கி வீழ்கிறேன் நான்
பாரதியை திட்டியபடி
கண் பேசிய வார்த்தைக்கு உன்
இமைகள் பதில் தந்தது.
தொடங்கிற்று காதல்
சம்மதம் கேட்டேன்,
மௌனமாய் விழி மூடினாய் நீ.
'ம்' என்ற தமிழ் தோற்றது
--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth
கருத்துகள்
என்ன நண்பரே காதல் வசியத்தில்
என்ன நண்பரே காதல் வசியத்தில் விழுந்துவிட்டீர்களா
வரிகளில் காதலின் தேன் துளிகள் வடிகிறதே
ம்ம்ம் கவிதைகள் எலாம் மிக அருமை
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
என்னால் நம்பமுடியவில்லை,அழமான
என்னால் நம்பமுடியவில்லை,அழமான காதல் தாக்கத்தின் வெளிபாடு தான் இந்த கிறுக்கல்கள் என்று தோன்றுகிறது.காதல் வந்தும்,அதை சொல்ல முடியாமல் நீங்கள் அழகாக தவிப்பது தெரிகிறது தோழா!

uma
நம்பிட்டேன்,சும்மா
நம்பிட்டேன்,சும்மா எழுதியதை,சும்மா,சும்மா காதால் கவிதை எழுதினால்,அதற்கு என்ன அர்த்தம் தோழா?
காதலில் விழாது காதல் கவிதையா!ம்,நடத்துங்க!

uma
காதலாகாமலா உள்ளத்தில் காதலெண்
காதலாகாமலா
உள்ளத்தில்
காதலெண்ணம் தோன்றியதால
இப்பாவைப் புனைந்தீர்கள்?
பாவண்ணம் நன்று!

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நண்பரே நன்று! நன்றல்ல காதல்
நண்பரே நன்று! நன்றல்ல காதல் தடுமாற்றத்தில் எழுத்து பிழை! ஆரம்பமே இப்படி என்றால் இன்னும் எப்படியோ!? கவனம் கவனம் கவனம்!















