அன்புக்கும் அழகுக்கும் அறிவுக்கும்
உன்னதமாய் புன்சிரிப்போடு
வலம் வந்த தமிழ் செல்வனை நாம்
மறக்கத்தான் முடியுமோ..
வீரமும் தியாகமும் நிறைந்த
சமுகப் பண்பாட்டுடனும் வலம் வந்த
உங்களை நாம் பிரிந்து
பரிதவிக்கின்றோம்..
உங்கள் சிரிப்பிலேயே.
அர்த்தங்கள் பலவிதமாய்
நம்பிக்கையின் சின்னமாய்
ஒளிவிளக்கை ஏற்றிவைப்பீர்கள்
உங்கள் முத்தான பற்களால்.
வெண்மை உள்ளம்போல்
நீங்கள் அனியும் ஆடை கூட
உங்களை போல்
வெண்மையானதைய்யா..
தவிக்கின்றோம் உங்கள்
பிரிவால்
வெதும்பகின்றோம் உங்கள்
புன்னகை தேடி.
கருத்துகள்
இந்த வரிகளில் இருந்து
இந்த வரிகளில் இருந்து தெரியவில்லையா உங்கள் இதயத்தில் அவர் வாழுகிறார் என்று .....
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
உங்கள்
உங்கள் சிரிப்பிலேயே.
அர்த்தங்கள் பலவிதமாய்
ஆமாங்க , ரொம்ப பேர் சிரிப்புலையே பல பதில்கள் சொல்லுவாங்க,ஆனா அத எல்லாராலையும் படிக்க முடியாது , இந்த சிரிப்ப பத்தின ஒரு தகவல் விரைவில் போடுரேன் ,என்னோட பக்கத்தில்
--
கோல்ட் மாரி
http://goldmari44.blogspot.com/
பாலைவனத்தில் பசுமை காண்போர் சங்கம் , ஈராக்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ...!
(No subject)

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








