புரிதலின் பயணிப்பில் நேசிப்பு
பூத்துக் குலுங்கும்
நினைவுகளில் தேன்சொரிந்து
இதயம் குளிரும்
வாசமிகு வாழ்வுக்கான
வசந்த வாயில்கள்
வழியெங்கும் வரவேற்கும் - ஆம்
இதுதான் காதலின் மேன்மையென
உள்ளங்கள்
ஒரு புரியாத ஸ்பரிசத்தில் பரவசப்படும்!
மார்கழிப் பனி பாவையர்க்கு
உன்னத நோன்பானது
சூடிக்கொடுத்தவளின் திருவாயால்!
பயணிப்பின் எல்லை
பயணிக்கும் திசையில்
ஒரு இடமறிந்த உண்மை!
நேசிப்பின் நடை
இருமனங்களின்
எல்லையற்ற தூரத்தின்
விளிம்புகள்!
வயதின் மூப்பிலும்
வியப்பின்றி விருந்துவைக்கும்
இல்லத்துணையின்
ஈடற்ற அன்பே காதல்!- இந்தக்
காதல் எது வரை? ....எனக்கேளின்....
துளிர் விடும் மனம் முதல்
துவளும் நாள் வரை
துணைவருமே காதல்
மாசற்ற முகத்துடன்...!
எனச் சொல்வோம்
நேசமுடன் எந்நாளும் !
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
கருத்துகள்
உண்மை உணர்வுகளைப் பரிமாற
உண்மை உணர்வுகளைப் பரிமாற வைக்கும் சிறந்த கவிதை.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அருமையான காதல்; உங்களை
அருமையான காதல்;
உங்களை போன்ற காதலரை அடைந்த காதலும் பெரும்பேரு பெற்றதே................
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
காதலில் இல்லத்துணையின் ஈடற்ற
காதலில்
இல்லத்துணையின்
ஈடற்ற அன்பே காதல்
இந்த வரிதான் சிறப்பு.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










