kirikasan's படம்

(உங்களை ஏமாற்ற இன்னொரு வரிகள்!)

ஒருதின மெனதுள முருகிடுமழகுடன்
உலகினில் எனதழகே
பெரிதென நினைவுகொள் பிறைநுதலிடை வரி
பிறந்திட அவளிருந்தாள்
அருகினில் நெருங்கிடு மவளிடம் விழிகளில்
எரியுது சினமெதுவோ
கருகிடுமலரெனும் மதுநிறைஇதழ், விழி
குவி இதழ் காக்கவென்றேன்

மறை நிதிபலதென மடிமுடிகொள வடி
வெடுமவள் சினமெழவெ
குறை எனதயலில குழையெழு தரு குதி
குரங்குறு மனமுமதே
கறைபடிமனதொடு அவளுடைபெயரதைப்
பலமுறைசொலும் செயலை
உறையில்ல அருகினில் ஒருநடை இவள்வர
செவிகொள மகிழ்வெழுமோ

எவளது பெயரதைஉரமுடன் வெளியினில்
மனமறுகிட வுரைத்தேன்
அவளது திருமுகம்விடை தரவினவினேன்
சிறுகணம் அமைதியெழ
அவிழுது ஒருமலரதி லொருமலர்இனி
நடுவினி லொருமலராம்
கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்

தெரிவதுஇலதென அரிவரி அ,ஆ தனை
எழுதிடும்சிறுகுழந்தாய்
திருடுசெய் குணமதி லருங் கலைமாமணி
பெரும்பொய்யி னதிபதியே!
"'எனைவிடுமுகமதில் ஏனடி இது அட
இழிசெயலதை நிறுத்தாய்
உனைப்பிரிந்திருதினம் இது பெரிதிடைவெளி
யென தெனதரு கணைந்தாய்!

இனிஉனதிடைவிடா குறும்பினைமுடியென
அவள்பெயருட னுரைத்தீர்
மனதுகொள் பெயரதை மறந்தனன் மடமகள்
அழகிய பெயரதென்றாள்
எனதரும்குறு இல்லம் வளர்சிறு நாயது
தொலைநடைகொள வழைத்தேன்
குமுதினி வாஉடன் திரும்பிடு நில்லெனப்
பெயரது அதுவே யென்றாள்

கீழே இன்னொரு வடிவம் பார்க்கவும்

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

கருத்துகள்

Ragavan's படம்

(No subject)


4

Sleep |-) :sleep:


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kirikasan's படம்

அதன் இன்னொரு


அதன் இன்னொரு வடிவம்

காதலி,
கண்களில் கோபம் நெருப்பாக எரிய நின்றாள்.
அருகில் சென்றேன்.
உன் மலர்போன்ற இதழ்கள்
தீயில் கருகிவிடப் போகின்றன
விழிகளை மூடு. என்றேன்.
கோபமா என்றேன்
இல்லையா
மரம் தாவும் குரங்கைப் போல
மனம் கொண்டவரே
உங்கள் மீதுதான் கோபம்
ஏன் என்றேன்.
உங்கள் வீட்டினோரம் வரும்போது
உள்ளே சத்தம் கேட்டது.
எவளோ ஒருத்தியின் பெயரை அடிக்கடி
சொல்லி அழைத்தீர்கள்.
இருநாட்கள் தானே பிரிந்திருந்தோம்.
இப்படி தொல்லை தருகிறாயே
என்றீர்கள்.
யாரவள்?
அவள் பெயர் கூட...
அடடா மறந்து விட்டேனே
அழகான பெயர்தான் என்றாள் கோபமாக.
அதற்குள் நான் வளர்த்த குட்டி நாய்
தூரமாக ஓடிச்செல்லவே
ஏய் குமுதினி இங்கே வா
எங்கும் போகாதே என்றேன்.
அதுதான் அதே பெயர்தான் என்றாள்.

Ragavan's படம்

இது டாப்பு...


4

இது டாப்பு... Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


chandru2110's படம்

பாரட்டத்தக்கது. //கவிழுது


8

பாரட்டத்தக்கது.
//கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்/// நல்ல உவமை.


சந்துரு


malikka's படம்

நன்று..


4

நன்று..


அன்புடன் மலிக்கா
உன்னையே நேசிக்கக் கற்றுக்கொள்
உலகம் உன்னைத்தேடி சுவாசிக்கும்.

http://niroodai.blogspot.com
http://fmalikka.blogspot.com
http://kalaisaral.blogspot.com