வான வில்லில் ஏழு வண்ணம்
வடித்து வைத்த தார்?
கான கத்தில் மயில்கள் ஆடக்
கற்றுத் தந்த தார்?
குளிர்ந்த காற்றை வீசும் இலையைக்
குலுக்கி விட்ட தார்
அழகுப் பூவில் இனிக்கும் தேனை
அடைத்து வைத்த தார்?
மாம ரத்தின் பூவில் காயை
மறைத்து வைத்த தார்?
நாம்வ ணங்கும் தெய்வம் தானே
நன்றி சொல்லு வோம்?
நன்றி : தங்கம்பழனி /http://tamil-children.blogspot.com
(1 vote)







