Skip to main content

என் அன்பு அன்னைக்கு......

URI: http://tamilnanbargal.com/node/41606
கருத்துகள்: 12Likes: 2177 views

என் அன்பு அன்னைக்கு......

சிவா.'s படம்

பிறக்கும் முன்பே என்னை நேசிதவள்..
கருவுற்ற
நாள் முதல் என்னை கண்போல் காத்தவள்.!!
வயிற்றில் எட்டி உதைத்த போதும் சிரித்தவள்..

நான் அழுது அவள் சிரித்தது நான் பிறந்த நொடி மட்டுமே...
நான் ஜெயித்த போது மகிழ்ச்சியில் கொஞ்சினாள் 
நான் தோற்று அழுத  போது தோல்வியை திட்டினாள் .

ஒரு பெண்ணை காட்டி காதலிக்கிறேன் என்றேன்...
கன நொடி யோசிக்காமல் எனக்காக மன்றாடினாள்...

காதலில் தோற்றேன்.......
வலி என்று சொல்லவும் இல்லை,
என் கண்ணீரை காட்டவும் இல்லை,
என் வலி அறிந்தாள் நான் அழாமலே..

தாய் அன்றோ அவள்...!!

கணநேரம் என்னை பிரியவில்லை...
என் துடிப்பை பார்த்து அவளும் தூங்கவில்லை...

கண் முன் இருக்கும் தேவதையை விட்டு விலகி போனேன்
இனி கன நேரமும் அவளை பிரிய மாட்டேன்...

நான் தோற்ற போதும்
துடித்த போதும்
அருகில் இருப்பவள்....

அவள் தந்த பிறவி
அவள் சிரிபதற்கே இனி......

பிறக்கும் வரை என்னை கருவில் சுமந்தவள்
இன்றுவரை இதயத்தில் சுமக்கிறாள்...

ஆயிரம் மொழிகள் போதாது  உனக்கு நன்றி கூற..
ஆயிரம் பிறவிகள் போதாது உன்கடனை திருப்பித்தர...
உன்பாதம் மட்டும் போதும் தாயே.....
சொர்க்கம் என்றும் பொய்யே....

அன்புடன் சிவா.....

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

Rukmani's படம்

உண்மை ... கரு மனித உரு பெறுவதற்க்கு முன்னே இருந்து நேசித்து காப்பவள் அன்னையே!!! அருமை ... வாழ்த்துக்கள் 

vinoth's படம்

      

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

தாய் பற்றி எழுதப்படும் கவிதைகளில் நான்
தவறுகள் தேடுவதில்லை....
தாயின் இலக்கணமே தவறுகளை மன்னிப்பதுதான்..

நன்று நன்று நன்று

காஞ்சிப் பட்டல்ல‌ என் கவிதை
ஆதாம் ஏவாள்
அரை மறைத்த‌ மரவுரி..........

என்றென்றும் அன்புடன்,
மாதேவன்

                     

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி