நீ போய் விட்டாய்....
இனி யாராவது வழியில்
உலக அழகாய்...
வந்தாலும் அசைக்க முடியாது
என் இதயத்தை...?
என் கவிதைகளை படித்து
இவ்வளவு தூரம் உங்களை
இம்சித்தவள் யார்..?என்று
எவளாவது கேட்பாள்...!!
பதிலுக்கு...நான்
நீயென்னை மறந்து விட சொன்னபோது
ஒரு 'வெற்று புன்னகையை'
உனக்கு பதிலாக அளித்தேனே
அதையே
அவளுக்கும் பதிலாக கொடுப்பேன்..!
-கோவை சதீஸ்.






