Skip to main content

இறைவனை அடைய

URI: http://tamilnanbargal.com/node/37643
கருத்துகள்: 4Likes: 1665 views

இறைவனை அடைய

Ponvannan's படம்

மனமே கேள்....

அன்பேதான் சிவமாகும்
ஆன்மாவே உயிரொளியாம்
இல்லறமே நல்லறமாம்
ஈசனடியே நிரந்தரமாம்

உள்ளமதைத் திறந்திடுவாய்
ஊனுடம்பை மறந்திடுவாய்
எல்லாமே அவன்செயல்தான்
ஏன் பிறந்தோம் என்றறிவாய்

ஐவர் வழி செல்லாதே
ஒளியிழந்து நில்லாதே
ஓடுடைந்து போகுமுன்னே
ஔவை வழி செல்வாயே.

...இஃதுதான் உன்னை மீட்டிடுமே

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

அருமையானக் கவிதை ஐயா! ஒவ்வொரு வரியின் தொடக்கமும் உயிரெழுத்தில் ஆரம்பம் அது ஒரு புத்துயிரானது கவிதைக்கு,

ஆயுதத்தை அற்புதமாக கையாண்டுள்ளீர்கள், கருத்தை சூசகமாக சொல்லியுள்ள தன்மை போற்றுதற்குறியது!

மீண்டும் மீண்டும் பொன்னான கவிதைகளை எமது புத்தி தெளிய வழங்குங்குவீர்கள் என எதிர்ப்பார்க்கின்றோம்!

என்றும்: சுஷ்ருவா

நண்பர் சுஷ்ருவாவின் கருத்தை ஏற்கிறேன். தங்கள் பதிவு சிறந்த வழிகாட்டலே! இதேபோன்று நல்ல தமிழில் தங்கள் வழிகாட்டலையும் மதியுரையையும் இளையவர்களுக்குத் தாருங்கள்.

மனம், உள்ளம் ஆகிய இரண்டையும் பாவித்துள்ளீர்கள். மனம், உள்ளம் ஆகிய இரண்டில் 'மனஸ்' என்ற வடமொழிச் சொல்லில் இருந்து தோன்றிய மனம் வடமொழிச் சொல், உள்ளல் அதாவது இருத்தல் அதாவது எண்ணியதெல்லாம் இருக்குமிடம் உள்ளம்; அது தமிழ் சொல். இனிவரும் பதிவுகளில் உள்ளம் என்ற சொல்லையே பாவிக்கவும். நானொரு சிறியன், என்றாலும் எனது பணிவான வேண்டுகை இது.

உங்கள் உள்ளத்தின் கருத்தை ஏற்கிறேன். இனிவரும் காலங்களில் பார்த்துக் கொள்வோமே. உங்களுக்கு என் நன்றி. தூய தமிழ் வளரப் பாடுபடுவோம்.