நீ மறைய
நினைவுகள் மட்டும் வளரும்.
வெட்டிய மூங்கில் மூட்டில்
வெடித்தெழும் முளைகள் போல.
நினைவுகளின்
மெழுகு வெளிச்சத்தில்
குளித்துக் கரையேறுகின்றன
இரவுப் பொழுதுகளின் இனிப்புத் தட்டுகள்.
இப்போதென்
இதயத்தின் இயங்கு தசைகளுக்குள்
இளைப்பாறிக் கிடக்கிறாய் நீ.
இரு முனைகள் எரித்துக் கொள்ளாமல்
இணைத்துக் கொள்ளும்
மின்சாரக் காலம் கவிழ்ந்து விட்டது.
இப்போது இடிபாடுகள் மட்டுமே மிச்சம்.
உடை வாளை உருவியபின்
உறையைத் தொலைத்து விட்டேன்.
வாளின் கூர்மை கேலியான பின்
ஓரமாய்க் கிடக்கிறது உறை.
வடிகட்டிகளை
வாரிக்கட்டிய வாழ்க்கையில்
தங்கி விட்டவை எல்லாம்
தவிர்க்க வேண்டியவை மட்டும்.
சூரியன் மறையத் துவங்குகிறான்.
தொலைதூரப் பயணம் துரத்துகிறது.
பாலைவனப் புதருக்குள்
யுகம் மறந்த ஒற்றை உயிராய்
வெப்பத்தில் ஜீவன் கனலாகத் துவங்கும்.
இன்னுமொரு காலை விடியும்,
நீ
இல்லை என்பதைச் சொல்ல.
இன்னுமொரு இரவு வரும்
உண்மையை செரித்து உறங்கிட.
கருத்துகள்
அற்புதமாய் உள்ளது.
அற்புதமாய் உள்ளது.
சந்துரு
அருமையான கவிதை...
அருமையான கவிதை...
>>>Selvakumar<<<
அருைம
அருைம
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
அருமை
அருமை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
வாளின் கூர்மை கேலியான
வாளின் கூர்மை கேலியான பின்
ஓரமாய்க் கிடக்கிறது உறை.
அருமையான வரி...












