Skip to main content

ஆலவிழுதுகள்

URI: http://tamilnanbargal.com/node/41432
கருத்துகள்: 27Likes: 2427 viewsசிறப்பு பதிவு

ஆலவிழுதுகள்

அப்படி ‌நாங்கள் என்ன‌ கேட்டோம்...
அப்ப‌டி நாங்கள் என்ன தான் கேட்டோம்...
உண்ண‌ உணவு தனே...
உடுத்த‌ உடைதானே...
இருக்க‌ இடம் தானே...
வாழ‌ வழிதானே...

வழியில்லை அங்கே
வாழ‌ மட்டுமில்லை
எதற்கும் வழியில்லை...

ஆட்டை, மாட்டை காக்கக்கூட‌ அமைப்புகள் இருக்க‌
எங்களைக் காக்க ஒரு நாதி கூட‌ இல்லை.

காட்டை, மேட்டை, கல்லை, மண்ணைக் கழனிகளாக்க
நாங்கள் ஓடானோம்...
உரிமை மட்டும் அவர்களுக்கு.

அது எப்ப‌டி...?
உழைப்பது நாங்கள்
உரிமை அவர்களுக்கு

உரிமை தான் அவர்களுக்கு
இருந்து விட்டுப் போகட்டும்.

எங்களது உடமையும், உடலும், உயிரும் கூடவா...?

ஒரு எறும்பு கடித்தால் அதை நாம் சும்மா விட்டு விடுகிறோமா...?
எப்ப‌டி விட‌ முடியும்.
வலி ஏற்படுத்திய‌ எறும்பையே சும்மா விட‌ முடியாத‌ நாம்,

உரிமையை, உயிரைக் கூட‌ பரவாயில்லை
உடலையும், மாணத்தையும் கூடவா விட்டு விட‌ முடியும்
அது எப்ப‌டி விட்டு விட‌ முடியும்

புலியையே முறத்தால் அடித்து விரட்டிய‌ வீரத் தமிழச்சியின்
வித்துக்கலல்லவா நாங்கள்

மதுரையை எரித்த‌ கற்புக் கரசி கண்ணகியின்
வழித்தோன்றல்கள் அல்லவா நாங்கள்

எங்களது உயிரை, உடமையை, உடலை, மாணத்தைக் காக்க‌
யாரை... நாடுவது...?  யாரை.... நாடுவது.....?
வேறு வழியேயில்லை...!!! போரைத் தவிர‌ யாரை நாடுவது
போர்... போர்..... போர்.......

போர் ஒன்றே நமது விடியல்
போரை நாடினோம் கிடைத்தது வெற்றி,
எழுந்த்து எம் புலிப்ப்டை
வீழ்ந்த்து எதிரியின் தொடை நடுங்கும் படை

உலகமே வியந்து பார்த்தது தமிழனின் போரை
உலகமே வியந்து பார்த்தது தமிழனின் வீரத்தை
உலகமே வியந்து பார்த்தது தமிழனின் விவேகத்தை
உலகமே வியந்து பார்த்தது தமிழினத்தின் சுத்த‌ மா... வீரனை.

உலகத்தின் ஒற்றை வீரனை
உலகத்தின் சுத்த வீரனை
ஒன்பது குள்ளநரி நாடுகளின் குறு மதியால்
வீழ்த்தி விட்டதாக‌ எண்ணுகிறார்கள் வீனர்கள்.

வீழ்ந்து விட‌ வில்லை விதைக்கப் பட்டிருக்கிறார்கள்
மீண்டும் எழும் எம் புலிப்படை...!
மீட்டெடுக்கும் எம் ஈழ‌ மண்ணை - பிறகு
விண்ணை முட்டும் தமிழனின் புகழ்.

மீண்டும் நான் மண்ணில் பிறப்பதெனில்
எங்கே தமிழன் வீரத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தன்மானத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தமிழனாக‌ வாழ்கிறானோ
அங்கே தமிழனாகப் பிறக்க‌ ஆசை.
                                                                                               இவன்
                                                                                     அ.கு. அன்பரசன்.

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

ஐயா
தங்களின் விமர்சனத்திற்கு நன்றி... 

தவறு என் மீது தான் எனது படைப்பை முழுமையடையாமல் பதிவு செய்து விட்டேன். 
மன்னியுங்கள்
                                 

அன்பரசன்

vinoth's படம்

மீண்டும் நான் மண்ணில் பிறப்பதெனில்
எங்கே தமிழன் வீரத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தன்மானத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தமிழனாக‌ வாழ்கிறானோ
அங்கே தமிழனாகப் பிறக்க‌ ஆசை.

                    

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

Ponvannan's படம்

உழைப்பது நாங்கள்
உரிமை அவர்களுக்கு

இன்றைய உலகம் இதுதானையா..
சுதந்திரம் எளிதினில் கிடைத்துவிடாது.
போராடித்தான் பெற வேண்டும்
              

pakee's படம்

அருமையான‌ கவிதை வாழ்த்துக்கள்         

சொர்க்கத்திற்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால் 
பூமியை நரகமாக்கி இருக்க மாட்டான் மனிதன்!..♥

www.PakeeCreation.Blogspot.Com

"மீண்டும் நான் மண்ணில் பிறப்பதெனில்
எங்கே தமிழன் வீரத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தன்மானத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தமிழனாக‌ வாழ்கிறானோ
அங்கே தமிழனாகப் பிறக்க‌ ஆசை." என்ற
அடிகளையே மீண்டும் மீண்டும் - நான்
படிப்பதையே விரும்புகின்றேன்!
                                        

மீண்டும் நான் மண்ணில் பிறப்பதெனில்
எங்கே தமிழன் வீரத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தன்மானத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தமிழனாக‌ வாழ்கிறானோ
அங்கே தமிழனாகப் பிறக்க‌ ஆசை.

      இதைப்படித்தபிறகு தான் எனக்கு தமிழனென்ற‌ உணர்வே வந்தது. 
எனக்கு தமிழனென்ற‌ வீரமும் வந்தது. நீண்ட‌ நாட்களுக்குப் பிறகுஒரு நல்ல‌
கவிதையைப் ப்டித்த‌ திருப்தி. மிக‌ மிக‌ மிக‌ மிக‌ மிக‌ அருமை..................................!!!!!!!
மிண்டும் உங்கள் படைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழர் வாழ்க‌... 
இந்த‌ கவிதையைப் படிக்கும் நண்பர்கள் கருத்தை மட்டும் எழுதி விட்டு
சும்மா விட்டு விடாதீர்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்
சொல்லுங்கள் அவர்களும் இதைப் படித்து விட்டு எழுதியவரை மட்டுமல்ல‌
உங்களையும் பாராட்டுவார்கள். நான் ஒரு வீரமுல்ல‌ தமிழன்...............................

" width="44" />" width="44" />" width="44" />" width="44" />" width="44" />" width="44" />" width="44" />" width="44" />" width="44" />" width="44" />

Film Actor J.PRAKASH
www.prakashjj.blogspot.com
e-mail:actorprakash50@gmail.com
cell:9840168794

நீ விரும்பும் உயிருக்கு
உன் அன்பு புரியாது ..............

உன்னை
விரும்பும் உயிருக்கு
உன்னை தவிர வேற
ஒன்றும் தெரியாது ..........

உன்
நட்பு

"மீண்டும் நான் மண்ணில் பிறப்பதெனில்
எங்கே தமிழன் வீரத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தன்மானத்தோடு வாழ்கிறானோ
எங்கே தமிழன் தமிழனாக‌ வாழ்கிறானோ
அங்கே தமிழனாகப் பிறக்க‌ ஆசை." என்ற
அடிகளையே மீண்டும் மீண்டும் - நான்
படிப்பதையே விரும்புகின்றேன்!