kumaran's படம்

அலங்காரபொம்மைகள்

''நாணத்தால் தலை
கவிழ்ந்து மணமகளாய்
நடந்த நங்கையவளைக
கண்டு ஏளனமாகச்
சிரித்தது-வாசலில் இருந்த
அலங்கார பொம்மை.....
நீயும் என்னைப்
போலதானடி என்றெண்ணி..''

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

syedali's படம்

திருமணத்தன்று அவள் அலங்கார


6

திருமணத்தன்று அவள்
அலங்கார பொம்மைதான்
பிரிதொரு நாட்களில்
காலம் கலைத்துவிடுகிறது
பொம்மைகளின் அலங்காரத்தை
பெண்மைகள் அலங்கார பொம்மைகள் அல்ல தோழா .....

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


kumaran's படம்

நம் சமூகத்தில் பெணகள் பிறந்த


நம் சமூகத்தில் பெணகள் பிறந்த நாள் முதலே அலங்காரம் தொடங்கிவிடுகிறது. பெயரில் அலங்காரம்,சின்ன கொலுசு,சின்ன வளையல் என அலங்காரம்,சாதி மத சம்பிரதாய அலங்காரம் என தொடங்கி ,பருவம் வந்த பின் கணக்கிலடங்கா அலங்காரங்கள்,காலையில் எழுந்து மாலை வரையும் ஏன் தூங்கும்போதும் அலங்காரம்தான்.கல்யாணத்தில் அலங்காரம்,தாலி,மெட்டி என அலங்காரங்கள்...கணவனை இழந்தால் விதவை என்ற அலங்காரம்,அவள் இறந்து பிணமானாலும் அலங்காரங்கள்....பெண் என்பவள் நம் சமூகத்தில் அலங்கார பொம்மைதான்.இதில் அவளது சுயம் கொல்லப்பட்டு குடும்பத்தின் திணிப்புகளை கடைபிடிக்கும் அலங்கார பொம்மையாகத்தான் வாழ்கிறாள். இப்படி எந்த அலங்காரத்தையும் தன்பால் ஏற்றிக்கொள்ளாத சுயசிந்தனை மிகுந்த சிறந்த பெண்மணிகள் நம் சமூகத்தில் மிகவும் குறைவே. அப்படி ஒரு சிறந்த தோழியைத்தான் நானும் வாழ்க்கைத்துணையாக தேடிக்கொண்டிருக்கிறேன் நண்பரே. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.