Skip to main content

அப்பா நட்ட மரம்

URI: http://tamilnanbargal.com/node/33006
கருத்துகள்: 3Likes: 01417 viewsசிறப்பு பதிவு

அப்பா நட்ட மரம்

syedali's படம்

நிழலைக் கொண்டு போர்த்தி
வீட்டு முற்றத்தில் ஒய்யாரமாய்
காலங்கள் கடந்து நிற்கிறது
அப்பா நட்ட மரம்
ளர்ந்த பிள்ளைகளின்
சொத்து பாகப் பிரிவு
மண்ணும் பொன்னும் பங்கிட்டபின்
மீதச் சொத்தாக மரம்
ல்லைக் கோட்டில் நிக்குது
நாளைக்கு வீடு வைக்கையில
இடைஞ்சல் வெட்டி போடுங்க
இடைநிலை காரர்களில் ஒருவர்
ங்க அப்பாவின் ஆத்மா
இந்த மரத்தில உறங்குது
அத வெட்டாதிங்க வெட்டாதிங்க
கண்ணீர்மல்க பெருத்த குரலுடன்
ஓடி வந்தாள் அம்மா
டன் சுமை தாங்காமல்
மரத்தில தூக்குபோட்ட அப்பாவை
சற்றென நினைவு படுத்தியது
அம்மாவின் அந்த அழுகைசத்தம்
தொட்டில் கட்டி தாலாட்டியதும்
ஊஞ்சல் கட்டி விளையாடிததையும்
கதை கதையாக புலம்பினாள்
பெற்ற பிள்ளைகளிடம்
நான் செத்தபிறகு வெட்டுங்க
மரத்தையல்ல கிளைகளைமட்டும்
என் சிதையை எரிக்க
மன்றாடினாள் அந்த தாய்
ந்த மரத்தில் உறங்குகிறது
அப்பாவின் ஆத்மா என்ற
அம்மாவின் ஆழமான நம்பிக்கை
கனிந்தது பிள்ளை நெஞ்சம்
ப்பாவின் ஆத்மாவையும்
அம்மாவின் கடந்த நினைவுகளையும்
சுமந்து நிற்கும் உயிருள்ளமரத்தை
கரங்களால் தொட்டு தடவ
கண்ணீர்கசிந்தது பிள்ளை விழிகளில்
யிரற்ற பொன்னும் பொருளையும்
பங்கிட்டு மனிதர்கள் பிரிக்கையில்
உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

அற்புதம்..
உயிருள்ள மனிதர்கள் உயிரில்லா பொருட்களுக்காய் பிரிந்துவிட ....

உயிருள்ள உறவை ஒருபோதும்
பிரிக்க இயலாது உணர்த்துகிறது
உயர்ந்து நிற்கும் மரம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...