நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
கல்லும் முள்ளும்
மேடும் பள்ளமும்
இருந்திருக்கும்...
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை தடவை
விழுந்திருப்பாய்
எழுந்திருப்பாய்
விழுந்தும் எழும்ப முடியாமல்
இருந்தும் இருப்பாய்...
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
படித்திருப்பாய்
பட்டறிந்திருப்பாய்
கண்டுபிடித்திருப்பாய்
அத்தனையும் எனக்குத் தெரியாதே...
நீ
நடந்து வந்த வழியில்
எத்தனை எத்தனை
அறிந்திருந்தாய்
நீ மீட்டுப் பார்த்திருந்தால்
அத்தனை அத்தனை
அறிவும்
உனக்கு வழிகாட்டும் போது
அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?
கருத்துகள்
ஆம், வாழ்க்கையே முதல் ஆசான்.
ஆம், வாழ்க்கையே முதல் ஆசான்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்ல வழிகாட்டல்!!! ”நீ
நல்ல வழிகாட்டல்!!!
”நீ மீட்டுப் பார்த்திருந்தால்
அத்தனை அத்தனை
அறிவும்
உனக்கு வழிகாட்டும் போது
அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு”?
அனுபவம் போல் ஒரு நல்லாசிரியன்
அனுபவம் போல் ஒரு நல்லாசிரியன் எதுவும் இல்லை, நண்பரே தாங்கள் சொல்வது மிகவும் சரியே, நல்லதொரு அறிவுரை யாவரும் கண்டிப்பாக இக்கவிதையைப் படித்து புரிந்து கொள்ளவும்!
உண்மையான அனுபவப் பூர்வமான
உண்மையான அனுபவப் பூர்வமான கவிதை நண்பரே.....
"அத்தனை அத்தனை
அறிவும்
உனக்கு வழிகாட்டும் போது
அடுத்தவர் மதியுரை உனக்கு எதற்கு?"
உண்மைத் தான்.......










