BaLaN's படம்

அக்கரை(றை)!

மஞ்சல் வானம் கொஞ்சம் இறங்கி
கடல் மேனி தழுவ
செங்கதிர் மறைந்தது கண்டு
வெண் பிறை முளைக்க...

அந்த அந்தி வேளையில்
எந்தன் சிந்தை அக்கரை நினைத்தது..!

எதிர் காற்றும் அலையும்
மாறி.. மாறி அடிக்க
துடுப்பை வலித என் கைகள்
களைப்பினால் வலிப்பினும்- மனம்
அக்கரை ஆசையில்
மேலும்... மேலும் (துடுப்பை) வலித்தது..!

நடுக் கடல் அடைந்ததும்
சீறிய அலை ஒன்று
என் துடுப்பை இழுத்துப் போக .. !

அக்கரை இனி எப்படிப் போவதென.?
என் மனம் அலைக்கழிய..!

அலை கடல் மீதினில்
நீந்திடத் தெரியா - நான்
காற்றினின் திசையினில் போவதாய்
பாய்மரம் விரிக்கிறேன்.....!

இனி நான் சேர்வது
எக்கரை மீதிலோ ..?
அக் கரை மீதினில்
அக்கறையாய் இருந்திடணும்..!!!

5.33333
Your rating: None Average: 5.3 (3 votes)

கருத்துகள்

vinoth's படம்

மஞ்சல் வானம் கொஞ்சம்


மஞ்சல் வானம் கொஞ்சம் இறங்கி
கடல் மேனி தழுவ
செங்கதிர் மறைந்தது கண்டு
வெண் பிறை முளைக்க...

நல்ல உவமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


ranjitsachin's படம்

அருமை..


chandru2110's படம்

அற்புதம். மிகவும்


அற்புதம். மிகவும் நல்லாயிருக்கு.


சந்துரு


BaLaN's படம்

மிக்க நன்றி நண்பர்களே


மிக்க நன்றி நண்பர்களே


அன்புடன்

பாலன்


annaa's படம்

மனம் அக்கரை ஆசையில் மேலும்...


மனம்
அக்கரை ஆசையில்
மேலும்... மேலும் (துடுப்பை) வலித்தது..!

அருமை..தொடருங்கள் நண்பரே.!


annaa