வலது கை, இடது கை!!!
"அப்பா,கோயிலின் கதவின் முன்னால் என்னப்பா எழுதி இருக்கு?"
ஐந்து வயது பையனைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்த இடத்தில், வாசலில் ஸ்வாமி தெரியாமல் பெயர் பொறித்து இருந்த இரும்பு கதவைப் பார்த்து தான் பையன் கேட்டான்.
"அது ஒன்னும் இல்லப்பா, இந்த கதவை கோவிலுக்கு தானமா கொடுத்தவங்க பேர் அதிலே போட்டுருக்காங்க. அவ்வளவு தான்."