dharshi's படம்

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான்
அவனுக்கு ஒரே மகள் அவள் அழகை பற்றி கேள்விப்பட்ட மூன்று இளவரசர்கள் அங்கு வந்தார்கள்.

மூவரையும் வரவேற்றான் அரசன் தன்மகளுக்கு மூவருமே பொருத்த மானவர்கள் என்று அறிந்தான்.
யாருக்கு திருமணம் செய்து வைப்பது என்று குழம்பினான்.
"உங்களுக்கு ஓர் ஆண்டு தவணை தருகிறேன் யார் கிடைதட்கரிய பொருளை கொண்டு வருகிறீர்களோ
அவருக்கே இளவரசியை திருமணம் செய்து தருவேன்" என்றான்.

அவர்கள் மூவரும் வேறொரு நாட்டிற்கு சென்று முயற்சியில் இறங்கினார்கள்.

அவர்களில் ஒருவனுக்கு எங்கு நிகழ்வதையும் பார்க்கக்கூடிய மாயக்கண்ணாடி கிடைத்தது
ஒருவனுக்கு எங்கு நினைத்தாலும் பறந்து செல்ல கூடிய மந்திர காலணி கிடைத்தது.
மற்றொருவனுக்கு எப்படி பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் தீர்க்க கூடிய அதிசய மாம்பழம் கிடைத்தது.

மீண்டும் மூவரும் ஒன்று சேர்ந்தனர். தங்களுக்கு கிடைத்த அறிய பொருட்களை பற்றி பெருமையாக பேசிக்கொண்டனர்.

முதலாமவன் தன்னிடம் இருந்த மாயக்கண்ணாடியை அவர்களிடம் காட்டி "மாயக்கண்ணாடியே இப்போது இளவரசி என்ன செய்கிறாள் என்பதைக்காட்டு " என்றான்.

உடனே கண்ணாடியில் இளவரசி தெரிந்தாள். அவள் கடும் நோயுற்று கிடப்பதும் மருத்துவர்கள் "இனி அவள் பிழைக்க மாட்டாள் சிறிது நேரத்தில் அவள் இறந்து விடுவாள்" என்று வருத்தத்துடன் சொல்வதும் தெரிந்தது.

இதைக்கண்ட மூவரும் திகைத்தனர்.

இரண்டாமவன் "என்னிடம் எங்கு நினைத்தாலும் உடனே செல்ல கூடிய காலணி உள்ளது யாராவது அவளை காப்பாற்றுவதாக இருந்தால் அணிந்து கொண்டு செல்லலாம் " என்றான்.

அதைகேட்ட மூன்றாமவன் காலணியை அணிந்து இளவரசியிடம் சென்றான். மந்திர மாம்பழத்தை உண்ண கொடுத்தான். அவள் அதை சாப்பிட்டு நலமாடைந்தாள்.
மற்ற இருவரும் சில நாட்களில் இளவரசியின் நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

மூவரும் தன்னால் தான் இளவரசியின் நோய் தீர்ந்தது தனக்கே இளவரசியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றனர்.

இளவரசி யாரை மணக்க வேண்டும்?? ஏன்??

என்றென்றும் நட்புடன்
dharshi.

10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

karthikeyan.t's படம்

இளவரசி யாரை மணக்க வேண்டும்?


இளவரசி யாரை மணக்க வேண்டும்? முதலாமவன்

ஏன்??
முதலாமவன் தன்னிடம் இருந்த மாயக்கண்ணாடியை அவர்களிடம் காட்டி "மாயக்கண்ணாடியே இப்போது இளவரசி என்ன செய்கிறாள் என்பதைக்காட்டு " என்றான்.

ஆகவே இளவரசி காப்பாற்றப்பட்டால்


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

நல்லா யோசிக்கிறீர்கள், பட்


நல்லா யோசிக்கிறீர்கள், பட் விடை அதுவல்ல நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


dharshi's படம்

இளவரசி யாரை மணக்க வேண்டும்??


இளவரசி யாரை மணக்க வேண்டும்?? ஏன்??

இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான தெளிவான பதில் இருந்தால் மட்டுமே விடை ஏற்றுகொள்ள படும்.

பரிசு :-
என் புதிர் கதைகளுக்கு விடை சொல்பவருக்கு ஒரு கவிதை (அவர் சொல்லும் தலைப்பில்) பரிசளிக்க படும்.

*ஆனால் தலைப்பு சிறியதாக இருக்க வேண்டும்*


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

அதைகேட்ட மூன்றாமவன் காலணியை


அதைகேட்ட மூன்றாமவன் காலணியை அணிந்து இளவரசியிடம் சென்றான். மந்திர மாம்பழத்தை உண்ண கொடுத்தான். அவள் அதை சாப்பிட்டு நலமாடைந்தாள்.

1.மூன்றாமவன் மந்திர மாம்பழத்தில் தந்திரமா காதலையும் சோர்த்துடானோ ,
2.கனிய கொடுக்கு முன்னே உன்னை காப்பாற்றுகிறேன் ஆனால் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டளையுடன் .
3. இளவரசி தன் நன்றியாக மூன்றாமவனை மணக்கலாம்


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

விடை இவற்றில் எதுவும்


விடை இவற்றில் எதுவும் இல்லை நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

இரண்டாமவன் "என்னிடம் எங்கு


இரண்டாமவன் "என்னிடம் எங்கு நினைத்தாலும் உடனே செல்ல கூடிய காலணி உள்ளது யாராவது அவளை காப்பாற்றுவதாக இருந்தால் அணிந்து கொண்டு செல்லலாம் " என்றான்.

1. மாயக்கண்ணாடியால் தெரிந்து கொள்ள ம‌ட்டும் முடிந்தது
2. மந்திர பழத்தால் சென்றால்தான் காப்பாற்ற முடியும்
3. காலணியை பயன் படுத்தி அவளை காப்பாற்றுவதாக இருந்தால் அணிந்து கொண்டு செல்லலாம் " என்றான்.

so அவளை காப்பாற்றவேண்டும் என்று நினைத்தவனை மணப்பதும் காரணமாக இருக்கலாம்


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


dharshi's படம்

இதுவும் இல்லை நன்றி


இதுவும் இல்லை நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


dharshi's படம்

இளவரசி யாரை மணக்க வேண்டும்??


இளவரசி யாரை மணக்க வேண்டும்?? ஏன்??

இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான தெளிவான பதில் இருந்தால் மட்டுமே விடை ஏற்றுகொள்ள படும்.

என்பதை கவனத்தில் கொள்ளவும்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

அவர்கள் மூவரும் வேறொரு


அவர்கள் மூவரும் வேறொரு நாட்டிற்கு சென்று முயற்சியில் இறங்கினார்கள்.///இதன் விழக்கம் புரியவில்லை ,,,அந்த நாட்டில் ஏன் முயற்ச்சியில் ஈடுபடமுடிய வில்லை,,,வேருநாட்டில் இந்த அனுமானிச சத்திக் கிடைக்கும் வாய்ப்பு இருந்திருக்குது,,ஆகையால் இந்த சக்தி இருந்த நாட்டின் மன்னனை திருமணம் செய்துக் கொண்டால் போதுமே,,,,இந்தமூன்றும் செயல்தான் ஆகையால் அதன் தன்மை பொற்ற சக்தியே கொடுத்தவன் தான் புருஷன்,,,



dharshi's படம்

இதுவும் இல்லை நன்றி அவர்கள்


இதுவும் இல்லை நன்றி

அவர்கள் மூவரும் வேறொரு நாட்டிற்கு சென்று முயற்சியில் இறங்கினார்கள்.///இதன் விழக்கம் புரியவில்லை ,,,அந்த நாட்டில் ஏன் முயற்ச்சியில் ஈடுபடமுடிய வில்லை,,,வேருநாட்டில் இந்த அனுமானிச சத்திக் கிடைக்கும் வாய்ப்பு இருந்திருக்குது.///

அந்த நாட்டில் கிடைக்கும் பொருள் அன் நட்டு மன்னனுக்கு கிடைததட்கரிய பொருளாக இருக்காது. நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

ம் அதுவும்


ம் அதுவும் சரிதான்,,,இருந்தாலும்,தெரிந்தாலும்,சென்றாலும் கொடுத்தவர் தான் பொரியவர்,,,அவளுக்கு பயன் மருந்து மட்டும் தான்,,,



dharshi's படம்

இதுவும் இல்லை நன்றி


இதுவும் இல்லை நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


dharshi's படம்

முயற்சி செய்த நண்பர்கள்


முயற்சி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

விடை :-

முதல் ரெண்டு பேரினதும் பொருட்கள் சேதமாகாமல் அப்படியே அவர்களிடம் கிடைத்து விட்டது ஆனால் மூன்றமவன் தன்னிடம் இருந்த மாங்கனியை தியாகம் செய்து இளவரசியை காப்பாற்றினான் தற்போது அவனிடம் எதுவும் இல்லை ஆகவே இளவரசியை அவனுக்கு திருமணம் செய்து வைக்கபட்டது.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

கொடுத்தவர் தான்


கொடுத்தவர் தான் பொரியவர்,,,அவளுக்கு பயன் மருந்து மட்டும் தான்,,,பதில் சரிதானே,,,



dharshi's படம்

மருந்து மட்டும் இல்லை


மருந்து மட்டும் இல்லை மாயக்கண்ணாடி , மந்திர காலணி எல்லாமே அவளுக்கு பயன் பட்டது. அதனால் இந்த விளக்கம் போதாது ஆகவே விடை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை நன்றி.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


BRAHMAGURU's படம்

தெரிந்தாலும்,சென்றாலும்


தெரிந்தாலும்,சென்றாலும் கொடுத்தவர் தான் பொரியவர்,,,அவளுக்கு பயன் மருந்து மட்டும் தான்,,,படித்துபார்



dharshi's படம்

சரி , நீங்கள் கேள்வியை சரியாக


சரி , நீங்கள் கேள்வியை சரியாக படிங்க. கேள்விக்கான விடையை தாருங்க நன்றி.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/