Skip to main content

நன்கொடை

URI: http://tamilnanbargal.com/node/23774
கருத்துகள்: 6Likes: 01230 views

நன்கொடை

dharshi's படம்

முனிவர் பரந்தாமனிடம் செல்வன் ஒருவன் வந்தான். ""ஐயா முனிவரே! தாங்கள் கோவில் கட்டுவதாக அறிந்தேன். அதற்காக நான் ஆயிரம் பொற்காசுகள் நன்கொடை தருவதாக உள்ளேன். தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றான்.

அவரும், ""கொண்டு வா!'' என்றார். அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தனர். தான் கொண்டு வந்திருந்த பையை அவரின் முன் ஆரவாரமாக வைத்தான் செல்வன். அதை அவிழ்த்துப் பொற்காசுகளைக் கீழே கொட்டினான். கலகலவென்ற ஓசையுடன் அவை விழுந்தன.

ஒவ்வொரு பொற்காசையும் தரையில் ஓசை எழுப்புமாறு எண்ணினான் அவன். நீண்ட நேரம் ஆயிற்று. எல்லாரும் அவன் செயலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்தப் பொற்காசுகளை எல்லாம் மீண்டும் பைக்குள் போட்டான். ""இதற்குள் ஆயிரம் பொற்காசுகள் உள்ளன,'' என்று பெருமையுடன் துறவியின் முன் நீட்டினான் அவன்.

""அன்பனே! இந்தப் பொற்காசுகள் எதுவும் வேண்டாம். நீயே இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்,'' என்றார் முனிவர்.

அதிர்ச்சி அடைந்த அவன், ""சற்று முன் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னீர்கள். இப்பொழுது மறுக்கிறீர்களே,'' என்று கேட்டான்.

""அன்பனே! இந்த நல்ல செயலுக்கு உண்மையான அன்புடன் நீ நன்கொடை தருவதாக நினைத்தேன். விளம்பரத்திற்காகத்தான் நீ தருகிறாய் என்பது புரிந்துவிட்டது. அதனால்தான் வேண்டாம் என்றேன்,'' என்றார் அவர்.

நன்றி "சிறுவர் மலர்"

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

VISWAM's படம்

nice