துறவி ஒருவரிடம் பாடம் கற்க நான்கு சீடர்கள் வந்தனர்.
எல்லோரிடமும் அவர் "உங்கள் வீட்டிலிருந்து ஒரே ஒரு செம்பு மட்டும் கொண்டு வாருங்கள். மற்ற உபயோகங்களுக்கு ஆசிரமப்போருல்கலையே உபயோகித்து கொள்ளலாம்" என்றார். சீடர்கள், சில சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார்கள். துறவிக்கு முதுமை நெருங்கியதும், தனக்கு பின் ஆசிரம பொறுப்பை ஒப்படைக்க, சீடர்கள் நால்வரில் தகுதியானவர் யார் என பரிசோதிக்க விரும்பினார்.
ஒருநாள் அவர்களை அழைத்து "உங்களது வீட்டிலிருந்து கொண்டுவந்த உங்கள் செம்பை எடுத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். நால்வரில் மூவர் மட்டும் சென்று தங்கள் அறையில் இருந்த செம்பை எடுத்து வந்துகாட்டினர்.
நான்காவது சீடன் சொன்னான்; " குருவே! நான் தப்களிடம் பாடம் கேட்க வந்த சில நாட்களிலேயே "நான்", "எனது" என்ற எண்ணம் போய்விட்டதே! ஆகவே என் வீடு என்று எதை சொல்வது? எங்கிருந்து எதை எப்படி எடுத்து வருவது ?" என்றான்.
குரு அவனிடமே ஆசிரம பொறுப்பை ஒப்படைத்தார்.
—
"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
கருத்துகள்
துறவு வாழ்க்கையில் இது
துறவு வாழ்க்கையில் இது பொருந்தலாம். ஆனால்,நடைமுறை வாழ்க்கையில் எல்லாம் வைத்து இருப்பவனுக்குதான் மதிப்பு,பொறுப்பு எல்லாம் கிடைக்கும்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
சூப்பர் ,,,இதை உலகவாழ்வோடு
சூப்பர் ,,,இதை உலகவாழ்வோடு ஒப்பிட்டு பார்கவும்,,,நாம் இந்த உலகில் பிறக்கும் போது கொண்டுவந்ததை மறந்துவிட்டோம்,,, நான்.... என்றதை மறந்ததால் இந்த உலகவாழ்கை உன்னிடம் ஒப்படைக்கப்பட்டது,,இது எப்படி
அப்போம் இரண்டில் எதுசரி,,,
நிழல்களின் ஒப்பந்தங்களை
நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது" இது எப்படி சரி,,,
மனதைவிட,,,உடலால் செய்யும் செயல் பெரிதா,,,
அது அந்த வசனத்தை அவரவர்
அது அந்த வசனத்தை அவரவர் புரிந்து கொள்வதில் இருக்கிறது///அப்போது அது நிலையில்லாத பொருனை உணர்த்துவதா,,,நிலை இல்லாதது எப்படி நிஷமாகும்,,,நிஷத்தை மட்டும் பதிக்கவும்,,,
நிஜங்களின் போராட்டத்தை
நிஜங்களின் போராட்டத்தை விட
நிழல்களின் ஒப்பந்தங்கள் சிறந்தது,,
இதில் நிஜம்என்பது புலனால் அறியபடுவதை குறிக்கும்,,,
நிழல்என்பது மனதால் உணரப்படுவதை குறிக்கும்,,
நான் சொல்வதல்லாம் நன்றியே
நான் சொல்வதல்லாம் நன்றியே நன்றியே தவிற வேறென்றும் அறியேன்,,,இது வாய்பூட்டுச்சட்டம்,,
தன்னலமற்றவன் தான்
தன்னலமற்றவன் தான் நல்லமுறையில் ஆசிரமத்தை நடத்திச்செல்ல முடியும். இது ஆட்சி செய்பவர்களுக்கும் பொருந்தும். அருமை.
நாளைக்கு அசிரமமும்
நாளைக்கு அசிரமமும் என்னுதில்லைனு போயிட்டா என்னா பன்றது...........
>>>Selvakumar<<<
நல்ல முடிவு....dharshi
நல்ல முடிவு....dharshi
>>>Selvakumar<<<
நல்ல கதை
நல்ல கதை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










