இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்....
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா...
6.. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க...?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க...?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க...?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க...?
ஏன் சார் ஏன்....
இத்த தான்...
திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்...
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த மேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..
நாங்களும் இன்ஜினியரிங் படிச்சிட்டு தான் வந்திருக்கோம் ............ ....

கருத்துகள்
உங்க கஸ்டத்த விட,உங்கள்
உங்க கஸ்டத்த விட,உங்கள் படைப்பு திறன் அருமை,அதற்க்கு தான் சூப்பர்,சரியா!

uma
என்ன் பண்ணுறது உங்க தோழியா
என்ன் பண்ணுறது உங்க தோழியா இருந்து கிட்டு நல்லவளா இல்லன்னா,எப்படி?

uma
இதெல்லாம் கூட பரவாயில்லை....
இதெல்லாம் கூட பரவாயில்லை.... 24x7 என்ற பெயரில் சில கம்பெனிகளில் 24 மணி நேரமும் பணியாளர்கள் தொல்லை படுத்தப்படும் அவலம் நடக்கிறது. குறிப்பாக, தனியார் தொலைத்தொடர்பு(செல்போன் நிறுவனங்கள்) பராமரிப்பு பணியாளர்கள் படும் பாடு சொல்லி மாளாது. 24 மணிநேரமும் செல்போன் சேவை இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக, கடைநிலை ஊழியர்களான டெக்னீஷியன்கள்,சூபர்வைசர்களை 24 மணி நேரமும் வேலை வாங்கும் அவலம் நடக்கிறது. மழையானாலும் புயலானாலும் பகல்,இரவு எந்த நேரமானாலும் அவர்கள் பழுது ஏற்பட்டால் சைட்டுக்கு செல்ல வேண்டும். விடுமுறை கிடையாது. 24 மணிநேரமும் செல்போன் ஆன் பண்ணியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விசாரணை, வேலை நீக்கம் என மிரட்டப்டுகிறார்கள்.சிப்ட் முறையும் இதில் இல்லை. உறவினர்கள் நண்பர்களின் நல்லது கெட்டதுக்கு போக முடியாது. பொண்டாட்டி பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.அவர்களுடன் நிம்மதியாக 10 நிமிடம் கூட செலவிட முடியாது. மேல்மட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களின் ஊழல் தேவைக்காக கீழே உள்ள பணியாளர்கள் கசக்கி பிழியப்படுகிறார்கள்.கொத்தடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள்.பணி நிரந்தரம் கிடையாது.போதுமான ஊதியம் கிடையாது. இதில் உடல்நலமின்றி கொஞ்சம் விடுப்பு எடுத்தால் கூட சம்பளபிடித்தம் வேறு.சம்பாதிப்பதற்காக தங்கள் சுயமரியாதையையும் தனித்தன்மைகளையும் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேச்சுரிமை இழந்து தனிமனித சுதந்திரத்தை இழந்து வாழும் அவர்களின் வாழ்வு வெளிச்சமடைவது எப்போது? பணியாளர் நல அலுவலகம் எப்போது விழித்துக்கொள்ளும்?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.












