தேவலோக வாழ்க்கை!!
ஒரு கணவன் - மனைவி. அவர்கள் வீட்டுக்குத் தேவலோகத்திலிருந்து ஓர் ஆள் வந்தான்.
வந்தவன் சொன்னான்
“இதோ பாருங்க... தேவலோகத்துக்கு வந்தா நீங்க எப்போதும் மகிழ்ச்சியா இருக்கலாம்.
ஆனா ஒரு விசயம். உங்க இரண்டு பேர்ல யாராவது ஒருத்தர்தான் என்னோடு வர முடியும். யார் வர்றீங்க?
முடிவு பண்ணிச் சொல்லுங்க. தேவலோக வாழ்க்கை யாருக்கு வேணும்?”
உடனே அந்தக் கணவன் கொஞ்சம் கூடத் தயங்காமல், “என் மனைவிக்காக நான் விட்டுக் கொடுக்கிறேன். அவளையே அழைச்சிட்டுப் போங்க” என்றான்.
வந்தவனுக்கு ஒரே ஆச்சர்யம்!
“அப்படீன்னா உனக்குத் தேவலோக வாழ்க்கை வேண்டாமா?” என்றான்
இவன் சொன்னான்.
“நீ இவளை இங்கேயிருந்து அழைச்சிட்டுப் போயிட்டா அப்புறம் எனக்கு இங்கேயே தேவலோக வாழ்க்கை தானே!”
--------------------------------
...........படித்ததில் ரசித்து சிரித்தது..........
சிறகை விரிப்போம் நூலிலிருந்து!!
கருத்துகள்
நன்று
நன்று
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil













