ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன அமைச்சரிடம் காட்டினான்.
அமைச்சர் சொன்னார், ''இவை மோசமான கவிதைகள். உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்?''
இது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.
அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
''எங்கே போகிறீர்?''என்று அரசன் கேட்டான்.
''கழுதை லாயத்திற்கு''என்றார் அமைச்சர்.

கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அர்த்தமுள்ள கதை. சிரிப்பு.
அர்த்தமுள்ள கதை. சிரிப்பு.
சந்துரு







