ரொம்ப நல்லது
மாக்கி: ஹே டோரா,என்ன ஆச்சரியம்!உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!என்ன சமாச்சாரங்கள்?
டோரா: ஒன்றுமில்லை,உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன்.
மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா!ரொம்ப நல்ல செய்தி தான்!
டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை.அவன் மிகவும் மோசமானவன்.
மாக்கி: என்ன மோசமானவனா?நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை.அவனிடம் நிறைய பணம் இருந்தது.
மாக்கி : பரவாயில்லையே,பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல்.ரொம்ப நல்லது.
டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை.அவன் ஒரு கஞ்சன்.
மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய்.வருத்தமாக இருக்கிறது.
டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை.அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான்.
மாக்கி: சொந்தமாக வீடா!ரொம்ப நல்ல செய்தி தான்.
டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை.அந்த வீடு எரிந்து விட்டது.
மாக்கி: என்ன எரிந்து விட்டதா?கேட்கவே சங்கடமாக இருக்கிறதே?
டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை.அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்
அழகும் பத்திரிகையும்
கலகலப்பு 2...
கலகலப்பு 2...
சொகுசா இருக்க தான்...சிரிக்க மட்டும்,
தலைவர் ஏன் கோபமா இருக்கார் ?
ரீமேக் திருக்குறள்(அதிகாரம்/குறட்டை )
உறங்கின் குறட்டையின்றி உறங்குக அஃதில்லார்
உறங்கலின் உறங்காமை நன்று.
- Srinivasan.K
நோ டென்ஷன்! ஒன்லி ரிலாக்ஸ்!
முடியில இளநரை என்று வந்த நோயாளியை ஏன் விரட்டி அனுப்பிவிட்டீர்கள்...?
விளையாடாதீங்க....வந்தவருக்கு 65 வயசு ஆகுது.....!
இதைத்தான் முடியல என்பதா....
வெள்ளை அடிக்க வந்த இடத்தில ஏன் திருடினாய்...?
அவங்கதான் சார் சொன்னாங்க சுத்தமா அடிச்சிட்டு போக சொல்லி...!!
ஏன் ஒயின்ஷாப்ல போய் குடிச்சிட்டு ஆபீஸ் வருகிறாய்...?
நீங்க கொடுக்கிற சம்பளத்திற்கு பார்ல போயா குடிச்சிட்டு வரமுடியும்....?
நீங்கள் எடுத்த "ஆறடி நிலம்" என்கிற
திரைப்படத்தை ஏன் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்...?
இனி என்னிடம் விற்க ஒரு அடி நிலமும் இல்லை.
அதனால்...நிறுத்திவிட்டேன்....!
கணவன் :உன்னை பார்த்த நேரத்துல...
மனைவி : உலகத்த மறந்துடீங்களா?
கணவன் : வேற ஒரு நல்ல பொண்ணா
பார்த்திருக்கலாமோ னு நினைச்சேன்
கிராமத்து அப்பா: எப்புடியோ ஒருவழியா
BSC படிப்ப முடிச்சுட்ட. அடுத்து என்ன செய்ய போற.
மகன்: அடுத்து அரியர்னு ஒரு மேல் படிப்பு
இருக்குப்பா . அதை படிக்கணும்.
அப்பா: அதையும் பெயில் ஆகாமல் படி கண்ணா...
கட்டின புடவையோடு வரச்சொன்னேன்..
நீ ஏன் இவ்வளவு புடவைகளை கொண்டுவந்தாய்...?
அத்தனையும் நான் கட்டினதுங்க அத்தான்...!
போலீஸ்: ஏன்பா அந்த அம்மா வீட்டுல டிவிய மட்டும் திருடினே...
திருடன்: அந்த அம்மா வீட்டுக்காரர் தாங்க திருட சொன்னார்
சீரியல் பாத்துகிட்டு சோறே போட்றதில்லையாம் ...
நோயாளி :அய்யா எனக்கு கையை பார்த்து
எப்ப கல்யாணம் ஆகும்னு சொல்லுங்க ?
டாக்டர் : இது ஹாஸ்பிடல் ...
ஜோசியம் பார்க்கிற இடம் இல்ல ..
நோயாளி : டிவில நாங்க இருக்கோம்
வாங்கனு சொன்னிங்களே ...சரி நான் வறேன்...
டாக்டர் : கன்சல்டன்சி பீஸ் 700 .
நோயாளி : எதுக்கு ..
டாக்டர் : சந்தேகத்தை
கிளியர் பண்ணிக்கிட்டியே...அதுக்குத்தா
நோயாளி : இப்ப எனக்கு நெஞ்சு வலிக்குது டாக்டர் ....
மனைவி: இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே...
பொண்டாட்டி ஒருத்தி இருக்கேன்னு மறந்துட்டீங்களா?
கணவன்: அதை மறக்கிறதுக்கு தானே குடிக்கிறேன்..
கணவன்: என் கண்ணுக்குள்ள நல்லா பாரு என்ன தெரியுது?
மனைவி: ஐயோ உண்மையான லவ் தெரியுதுங்க...
கணவன்: நாசமாப் போச்சு...கண்ணுல என்னவோ விழுந்து உறுத்துது...
சீக்கிரமா ஊதுடி..ரொம்ப வலிக்குது...
ஹெட்மாஸ்டர்: டேய் எவன்டா, தமிழாசிரியரோட
காலை பிடிச்சு இழுத்தவன்...
மாணவன்: அவர் தான் ஸார் சொன்னார்,
நாளை காலை வாருங்கள் என்று...தப்பா ஸார்...
ஹெட்மாஸ்டர்: தப்பே இல்லடா...உன்னை
எல்லாம் ஸ்கூல்ல சேர்த்தேன் பாரு
அது தான் நான் பண்ணின பெரிய தப்பு...
வடை போச்சே...
ஜோக்ஸ்
டாக்டர் ஜோக் –
“டாக்டர் இந்தப் பல் நேத்து ஒரு நாள் மட்டும் ஆடினது”
“அப்ப அது ஒன்டே மேட்சுன்னு சொல்லுங்க”
திருடன் ஜோக் –
“ஏட்டையா வீட்டு ரேசன் கார்டைப் பார்த்து, கபாலி ஏன் கண் கலங்கிறான்..”
“அதுல அவன் பேரும் இருந்துச்சாம்”
மன்னர் ஜோக் –
“மன்னா இளவரசர் தங்களை அப்படியே உரித்து வைத்திருக்கிறார்”
“எதில் அமைச்சரே?”
“புறாவை உரிப்பதில் தான்!”
குடிமகன் ஜோக் –
“ஏர்ப்போட்ல அந்த குடிகாரப் பயணி என்ன கலாட்டாப் பண்றாரு?”
“சரக்கு விமானத்துலதான் போவேன் அடம்பிடிக்காரு”
நடிகை ஜோக் –
“அந்த ஆள் பயங்கர சோம்பேறின்னு எதை வைச்சு சொல்றே…”
“புடவை துவைக்க பயந்துக் கிட்டு கவர்ச்சி நடிகையை கட்டிக்கிட்டார்னா பாரேன்”
பாகவதர் ஜோக் –
“அந்த பாகவதரோட கச்சேரிக்கு போனா நூறு ரூபாய் செலவாகும்”
“உள்ளே போக பணம் கொடுக்கணுமா”
“இல்ல… பாதியில வெளியே வர பணம் கொடுக்கனும்”
கடவுள் ஜோக் –
“கடவுளே நான் ஜனாதிபதியாக ஆகும் வரம் வேண்டும்”
“பல மக்களை காக்கும் பணி அது. வேறு வரம் கேள்”
“தளபதி படம் 100 நாள் ஓட வேண்டும்”
“நீ அமெரிக்க ஜனாதிபதியாக ஆக வேண்டுமா, இல்லை இந்திய ஜனாதிபதியாகவா”







