மாப்பு .....
நான் ஒரு படம் எடுக்கிறேன் .... அதில நீதான் கதாநாயகன் .... நான்தான் வில்லன் ....
கதாநாயகிக்கு கடைசியில் நீதான்... கதாநாயகன் ஆச்சே ..!! வாழ்க்கை கொடுக்கிறே ..!!!
படத்தின் டைட்டில் " இனிசல் உனது பேபி எனது "
ஜோசியருக்கு கடன் கொடுத்தது தப்பா போச்சு ..!!!
ஏண்டா ....?
தினம் தோறும் என் ராசிக்கும் கடன் வசூலிப்பது உங்களுக்கு இன்று தாமதமாகும் என்கிறார் ...??? ************************ என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா...!!!
அதோட அவாவுக்கு கோபம் குறைஞ்ச்சிடுமா ...??
இல்ல நான் தோப்புக்கரணம் போட்டு முடிஞ்சிடும்
************************* எனக்கு உடம்பு வலிச்சா ....மனைவிதான் மிதிச்சுவிடுவா ...!!!
மனைவிட்ட உதவாங்க்கிறத எவ்வளவு பந்தாவா சொல்லுறான் பாரு..வடிவேலுட்ட கிளாஸ் எடுத்திருப்பாரோ ...
ஹலோ இது கஸ்ரமர் கெயாரா..?
ஆமாம் சொல்லுங்க மேடம்.....
என்ன ப்ரப்பிலம்....?
என் 5 வயது மகன் சிம்காட்ர்டை விழுங்கிட்டான் அதுல 95 ரூபா பலன்ஸ் இருக்கு ...
அவன் பேசும் போது காசு (குறையுமா )போகுமா .....?
அமெரிக்காவில் திருடரை கண்டுபிடிக்க மிசின் ஒன்றை கண்டு பிடிச்சாங்க ... அந்த மிசினை ........................................?
இங்கிலாந்து வாங்கி பயன் படுத்திய போது 30 நிமிடத்தில் 50 திருடர்களை கண்டு பிடித்தது
பிரான்ஞ் வாங்கி பயன் படுத்திய போது 30 நிமிடத்தில் 80 திருடர்களை கண்டு பிடித்தது
நம்ம நாடு வாங்கி பயன் படுத்திய போது ஒரு நிமிடத்தில் மிசினையே காணல்ல
"மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேருந்து பேசறேன்"
"சொல்லுங்க ஸார், என்ன வேணும்?"
"எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.."
"ஸார் இது உங்க பர்ஸனல் விஷயம்.."
"முட்டாள், ஜன்னல் திறக்க வரலை, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு"
(ஒரு அமெரிக்கப் பத்திரிகையில் படித்ததின் தமிழாக்கம்)
பேராசிரியர்::: தாஜ் மகாலின் சிறப்பு என்ன..?
மாணவன் ::: இந்தியாவில் ஊழல் நடக்காமல் கட்டப்பட்ட ஒரே ஒரு கட்டிடம் சார்..!
நாட்டாமை = "மாரியாத்தாவிற்கும் மங்காத்தாவிற்கும் என்ன வித்தியாசம்?"
பூசாரி = "தலையை விரிச்சு போட்டு ஆடினா, அது மாரியாத்தா. நம்ம 'தல' யே வந்து ஆடினா அது மங்காத்தா"
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கேட்டது
ஒருவர்= "எதுக்கு அந்த ஆளை எல்லாரும் அடிச்சிட்டு இருக்காங்க?"
மற்றொருவர் = "இங்க தமிழ் ஆசிரியர் யாருனு கேட்டதுக்கு 'அடியேன்' னு சொன்னாராம்.
எங்கேயோ படித்தது
மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.
முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.
இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.
மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.
கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.
கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.
மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.
பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.
நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.
நண்பர்களே...உங்கள் ஆபீசில் போர் அடிக்கும் போது நேரத்தைக் கழிக்க சில வழிகளை இங்கு காணலாம்.
நீங்கள் மாட்டிக் கொண்டால் கம்பேனி பொறுப்பேற்காது
1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.
2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை (அல்லது ஃபிகர்களை) எண்ணிக்கொண்டிருக்கலாம்.
3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.
4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.
5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி...அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.
6.பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.
7.இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை
பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.
8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.
9.கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம்,ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.
10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.
11.காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)
12.பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.
13.இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.
14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்டகோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.
15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.
16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.
18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.
19.யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.
20.வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.
21.தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.
22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.
23.உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.
24.உங்களுக்குள் கலைத்திறன் அதிகம் இருந்தால் அதை வெளியில் கொண்டு வரலாம். ************
"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"
"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."
"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."
இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"
"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்" "ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"
Boy: கேன் ஐ லவ் யு ?
Girl: சாரி , நான் கேனையை லவ் பண்ண மாட்டேன் !
என் மாமியார் ரயிலில் இருந்து கீழே விழுந்துட்டாங்க
உடனே செயினை பிடிச்சி இழுக்கலையா ?
இழுத்தேன். செயின் மட்டும் தான் வந்தது. மாமியார் விழுந்துட்டார்
! ! ! ! ! ! ! !
ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு!
மற்றவன்: ஏன்?
ஒருவன்: அவள் பேச மாட்டாளாம்... ********************* ரவி: படிப்பை முடிச்சிட்டீங்க மேல என்ன பண்ணப் போறீங்க?
ரகு: மேல ஒண்ணும் பண்ண முடியாது. பூமியிலேதான் எதாவது பண்ணனும். ********************
எனக்கு வராத எஸ்.எம்.எஸ் * * * * * * * * * * * * * *
என்ன... தேடறீங்க..? அதான் தலைப்பிலேயே போட்டிருக்கேனே... வராத எஸ்.எம்.எஸுன்னு... ஹி... ஹி............................................
அவன் :- அந்த நடிகர் ஏன் கொஞ்ச நாளா யார்டயும் பேசாம அமைதியா ஆயிட்டாரு? அப்படியே பேசுனாலும் தெரியல / கவலையா இருக்குனு மட்டும் சொல்லுறாரு?
இவன் :- அடுத்த படத்துல பிரதமர் வேடமாம், அதான் அந்த கேரக்டர் உள்ள வாங்கிக்க பயிற்சி எடுக்குறார்