ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
எ.கா: வீடு, கண், போ,
நிலைமொழியும் வருமொழியும்
இரு சொற்களின் புணர்ச்சியில் , முதலிலுள்ள சொல் நிலைமொழியெனவும் , இரண்டாவதாக வந்து சேரும் சொல் வருமொழியெனவும் அழைக்கப்படும்: -
(உ-ம்)
படிப்பது + யாது
இதில் படிப்பது = நிலைமொழி , யாது = வருமொழி.
பதம்
ஒரு சொல் அல்லது வார்த்தையை பதமென்று சொல்கிறோம். அதில் பல்வேறு உறுப்புக்களாக பிரிக்கக் கூடிய சொல் பகுபதம். அப்படி பிரிக்க முடியாத சொல் பகாப் பதம்.: -
(உ-ம்)
பகுபதம் - கண்டான் = காண் + ட் + ஆன் ,
பகாப்பதம் - கல், மண்.
பகுதி , விகுதி
ஒரு சொல்லில் முதலில் இருக்கும் உறுப்பு பகுதி எனப்படுகிறது. இதனை முதல்நிலை என்றும் சொல்லலாம். அதே சொல்லின் இறுதியுறுப்பு விகுதியாகும். இதனை இறுதிநிலை என்றும் சொல்லலாம்.: -
(உ-ம்)
"கண்டான்" இதனை காண் + ட் + ஆன் எனப் பிரித்தால்
காண் - முதல்நிலை, ஆன் - இறுதிநிலை.
சொல்லின் வகைகள்

