கேள்வி;’’என் குழந்தையை இந்த ஆண்டு பள்ளியில் சேர்க்க உள்ளேன். எங்கள் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விசாரித்த போது, தமிழக அரசு சமச்சீர் கல்வி கொண்டு வருவதால், தாங்கள் சி.பி.எஸ்.இ. (Central Board of secondary education)பாடத்திட்டத்துக்கு மாறப்போவதாக தெரிவித்தார்க்ள்.சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் இருக்காது என்கிறார்களே,அது உண்மையா?
பதில்; வசந்தி தேவி-கல்வியாளர்.
‘’சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் பயிற்று மொழியாக இருக்காதே தவிர, குறிப்பிட்ட வகுப்பு வரை தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளும் விருப்ப பாடமாக சொல்லித் தரப்படும். பொதுவாக, தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் வளர்வது எந்தக் குழந்தைக்கும் நல்லது இல்லை. அது சரியான வளர்ப்பும் அல்ல. தாய்மொழியில் கல்வி கற்கும்போதுதான் ஒரு குழந்தையின் அறிவாற்றல்,சிந்திக்கும் திறன்,பிறருடனான தொடர்புகள் மேம்படும். இந்தியா முழுமைக்குமான ஒரே பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ. தமிழகம் முழுமைக்குமான ஒரே பாடத்திட்டம் சமச்சீர் கல்வி. உங்கள் குழந்தைக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.!’’