கேள்வி; மகளிர் சுய உதவிக்குழு துவக்க ஆசை. யாரை அணுகவேண்டும்? என்ன விதிமுறைகள்?
பதில்; ஜி.ராதா-தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயககுநர்.
‘’ஒரு சுய உதவிக் குழு தொடங்க, குறைந்த்து 12 முதல் அதிகபட்சம் 20 மகளிர் கட்டாயம். அனைவரும் ஒரே பகுதியினராக இருக்கவேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ‘திட்ட அலுவலர்,மகளிர் திட்டம்’ என்ற தனிப்பிரிவு இருக்கும். அவர்களின் கீழ் ‘மகளிர் திட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்’ இருக்கும். அந்த தொண்டு நிறுவனங்கள்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வழி நடத்தும். குழு தொடங்கியதும் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஊக்குனருக்குத் தனிப் பயிற்சியும் ,உறுப்பினர்களுக்கு தனிப் பயிற்சியும் வழங்கப்படும். ஒரு குழுவுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சுழல் நிதி வழங்கப்படும். அதில் 10 ஆயிரம் ரூபாய் திரும்பச் செலுத்த தேவை இல்லாத மானியம். உடனடியாக,உங்கள் மாவட்டத்தின் மகளிர் திட்ட அலுவலரை அணுகுங்கள். வாழ்த்துக்கள்.!’’