kumaran's படம்

கேள்வி; ‘’அரசு ஊழியராக இருந்த என் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். கருணை அடிப்படையில் அவரது வேலையை எனக்கு வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்து உள்ளேன். தற்போது மறுமணம் செய்துகொள்ள இருக்கிறேன். மற்மணம் செய்துகொள்வதால் கருணை அடிப்படையிலான அந்த வேலை எனக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்குமா?’’

பதில்; கே.அழகுராமன், வழக்கறிஞர்.

‘’நிச்சயம் சிக்கல் இருக்கும். கருணை அடிப்படையில் வேலை என்பதன் நோக்கமே, எதிர்பாராத நிகழ்வு(கணவர் இறப்பு) காரணமாக அந்தக் குடும்பம் பாதிக்ப்படக்கூடாது என்பதுதான். இந்த நிலையில் நீங்கள் மறுமணம் செய்தால், கருணை அடிப்படையில் அந்த வேலை கிடைப்பது நிச்சயம் மறு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதை மறைத்து வேலை வாங்கினாலும்கூட, பின்னாளில் உண்மை நிலை தெரிய வரும்போது, நீங்கள் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஒருவேளை நீங்கள் கருணை அடிப்படையிலான அந்த வேலையை ஏற்றுக்கொண்ட பிறகு, மறுமணம் முடித்தால், பெரிய சிக்கல் வராது.’’.

0
Your rating: None

கருத்துகள்

kumaran's படம்

கேள்வி பதில் 3ல்


கேள்வி பதில் 3ல் கருத்தரித்தல் குறித்த சந்தேகத்திற்கு நிபுணரின் விளக்கம் பதிவு செய்தேன். நம் தளத்தில் அது மறைக்கப்பட்டுவிட்டது. Dingue அது மறைக்கப்பட என்ன காரணம்? நிர்வாகியிடமிருந்து விளக்கம் தேவை.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

(No subject)


Oups


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..