கேள்வி; ‘’என் நண்பனின் காதலுக்கு இரு தரப்பினர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு. அந்தப் பெண்ணுக்குக் கட்டாயத் திருமணம் முடிக்க அவள் பெற்றோர் முயற்சித்ததால்,ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி, என் உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். இருவருக்கும் வயது 20. நண்பன் திருமண வயதை எட்ட இன்னும் ஆறுமாத காலம் உள்ளது. இந்த நிலையில் அவர்கள் இணைந்து இருக்கலாமா?
பதில்;குமாரதேவன்-வழக்கறிஞர்.
‘’சட்டப்படி உங்கள் நண்பர் செய்தது தவறுதான். உங்கள் நண்பர் மீது பெண் வீட்டினர் புகார் அளித்திருந்தால்,போலீஸார் நிச்சயம் அவர் மீது வழக்குப் பதிவு செய்வார்கள். அப்படி உங்கள் நண்பரை கைது செய்து விசாரிக்கும் பட்சத்தில், பெண் மேஜராக இருப்பதால்,அவர் விருப்பப்படி முடிவு எடுக்கச் சுதந்திரம் உண்டு. ஆனால்,உங்கள் நண்பருக்கு உரிய வயது வந்த பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடியும். பொறுத்திருங்கள்!’’