இலவசம்! கல்விக்கு ஏனில்லை?
தமிழக முதல்வர் தினம் ஒரு இலவசம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவு அது இலவசம், இது இலவசம் என அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன! ஆனால் மிகவும் தேவையான கல்வியை இலவசமாக கொடுப்போம் என்னும் அறிவிப்பை காணோம்.
இப்போது பத்திரிக்கைகளை படித்தால் தெரியும். மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் செங்கல் சூளையில் வேலை பார்ப்பதையும், பொறியியல் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் கூலி வேலைக்கு செல்வதையும். இந்த மாதிரி சூழ்நிலையில் தள்ளப்படும் ஏழைகளுக்கு கல்வி ஏனில்லை இலவசம்? என்ற கேள்வி ஒவ்வரு சாமானியனுக்கும் வரும். இலவச மின்சாரம், இலவச பம்ப் செட்(இதற்கு சரியான தமிழ் தெரிந்தால் சொல்லுங்கள்), இலவச தொலைகாட்சி என அறிவித்துவரும் முதல்வருக்கு, இந்த கேள்வி வராதது வியப்பே!
முன்பெல்லாம் அரசு கல்லூரிகளில் மேற்படிப்பு இலவசமாகத்தான் இருந்தது. அதிக மதிப்பெண்களுடன் இலவசமாக மருத்துவ படிப்பையோ, பொறியியல் படிப்பையோ இந்தியாவில் படித்து விட்டு, முடித்த கையேடு இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ போய் வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். இப்படி ஒரு சிக்கல் இருந்ததால்தான், படிப்பிற்கான செலவை கட்டும்படியா, இப்படி ஒரு முறை அமலுக்கு வந்தது. ஆனால் அது இன்று விபரீதமாகி ஏழைகளை பாதிக்கும் படியாக போய் விட்டது.
இது மாதிரி பாதிக்கப்படும் ஏழைகளுக்கு இலவசமாக மேற்படிப்பை அரசு கண்டிப்பாக வழங்க வேண்டும். மேலே சொன்ன மாதிரி, அவர்கள் படிப்பை முடித்த கையேடு வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் சில வருடங்கள் இந்தியாவில் வேலை செய்யவேண்டும் என்னும் நிபந்த்தனையை வைக்கலாம். இந்தியாவில் வேலை கிடைக்குமா? என்பது வேறு விஷயம்.
இப்படி சகட்டு மேனிக்கு பணம் கட்ட சொல்வதால்தான் அது ஒரு வியாபார பொருளாகி இத்தனை தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளாய் உருவெடுத்துள்ளது. இப்படி மேற்படிப்பு இலவசமாக்கப்பட்டால், இந்த தனியார் கல்வி வியாபாரிகள் காணாமல் போய் விடுவார்கள்.
இந்த இலவச மின்சாரம் ஒன்றும் ஏழைக்கு பயன்படுவதில்லை. என் கிராமத்திலே ஒரு சென்று நிலம், ஒரு லட்சம் ருபாய் இன்று விலை போகிறது. அங்கே ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அவன் கோடீஸ்வரன். அவனுக்கு எதற்கு இலவச மின்சாரம்? அப்படி இலவசத்தை கொடுத்து நீங்கள் தமிழனை மகிழ்விக்க வேண்டுமென்றால், கிரிக்கெட் போட்டியை காண அனுமதி இலவசம், தமிழக திரையரங்குகளில் திரைப்படம் காண அனுமதி இலவசம் என அறிவியுங்கள். இவை இரண்டும் தமிழனுக்கு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
இல்லை, என் இலவச அறிவுப்புகள் இன்னும் தொடரும் என்றால், தயவு செய்து இந்த கல்வியும் இலவசம் என அறிவியுங்கள்!
http://www.tamilcatholican.com/2010/08/blog-post.html
- செல்வராஜ்'s blog
- Login or register to post comments
- 476 reads
கருத்துகள்
இன்றைய கல்வி விற்கப்படும்
இன்றைய கல்வி விற்கப்படும் விலையில் மேற்படிப்புகள் ஏழைகளுக்கு கானல் நீர்தான். 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
காசுள்ளவருக்கு கல்வி என்று
காசுள்ளவருக்கு கல்வி என்று உள்ளது. நல்ல லாபம் தரும் பொருளை இலவசமாகத் தர அவர் என்ன காமராஜரா? கலைஞர் அல்லவா? லாபம், நஷ்டம் பார்க்காமலா இருப்பார்?
நல்ல தேவையான கேள்விகள்
நல்ல தேவையான கேள்விகள் ஐயா
கருணாநிதி இதைச்செய்தால் அது அவரது வாழ்க்கையில் செய்த புண்ணியமாக இருக்கும்.
ஆனால் செய்ய விடுவார்களா?
கேஸ் அடுப்பு, தொலைக்காட்சி போன்ற மற்ற இலவசம் என்றால் அந்தந்த கம்பனிகளிடமிருந்து நல்ல தொகை கிடைக்கும்
சொந்தக்காரர்களின் கம்பனிகளிடமிருந்து பொருள் வாங்கி வியாபாரம் பார்க்கலாம்.
நீங்க சொன்ன மாதிரி கலைஞர் யூனிவர்சிட்டி வந்தாலும் வரலாம். அதற்கு தனியாக பாராட்டுவிழா நடத்தப்படலாம்.
--
பம்ப் செட் - குழாய்யடி?? குழாய்கிணறு?
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இலவசமாக வழங்க வேண்டியதை
இலவசமாக வழங்க வேண்டியதை வழங்காமல் தேவையில்லாத இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறியாக்கி விட்டுத்தான் போவார் போல! இந்த செம்மொழி முதல்வர் பம்ப் செட், பம்ப் செட் என ஆங்கிலத்தில் தான் சொல்கிறாரே தவிர, அதை தமிழில் சொல்லவே மாட்டேன்கிறாரே. பம்ப் செட்டிற்கு தமிழ்தான் என்னவாம். தெரிந்தவர் சொல்லுங்களையா.







