Rekha's படம்

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே ....

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோருட்ட

உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட

(வெள்ளி நிலவே வெள்ளி நிலவே)

விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே

உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே

நிலா சோறு நிலா சோறு தரவா நாளும் பசியாற

குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக

வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க

ஆடும் மயில் தொகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச

தேவ கனியே தெய்வதென்ன நீ தன்னாலே

(வெள்ளி நிலவே வெள்ளி நிலவே)

முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு

நெஞ்சில் வாழும் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு

உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு

உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு

வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே

வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே

தேவ கன்னியே ,,,தெய்வதென்ன நீ தன்னாலே

வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது

மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோறூட்ட

தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னை காப்பாற்ற

வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது

தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா [3]

http://kavithozhi.blogspot.com/2011/08/blog-post_3891.html