AANMEKAN's படம்

சக்தியில்லையே சிவன்யில்லை,

Oups தன்னிலே எந்தஉயி ராயினும் முன்செய்த கருமத்தைக் காரணம் ஆக்கியே
இப்பிறவி இதமாக வாய்த்திடும் நிச்சயம் முன்செய்த கருமங்கள் வெளிப்பட்டுத் தோன்றிடும்.

கருமகாண் டத்திலே நின்றிடும் ஜீவனும் கருமத்திற் கேற்பமறு பிறவியை எடுத்திடும்
அப்பிறவி இடையினில் தடைபடில் எஞ்சியதை எப்படியும் அனுபவித் தாகவே வேண்டுமாம்.

கருமங்கள் ஒவ்வொன்றும் வந்துபோ கும்போது கண்டறிய வேண்டுமக் கருமத்தின் காரணம்
கரும ஆசைகளின் அடிப்படையில் முன்செய்த கருமபண் புகளையும் நேர்காண வேண்டும்.

கருமமும் மனதிருப்தி தந்திடும் காலத்தில் கருமத்தின் பலன்களால் முழுமைபெற முடியாது
மனத்தின் நிலையினை அனுசரித் தமைந்த ஆசையே கர;மத்தின் உடைமையாய் ஆக்கிடும்.

பலனையும் நாடாது இறையரர்ப் பணமாய் நிலைபெறக் கருமம் செய்திடல் வேண்டும்
அதுவே முழுமையாம், கரும ழூலோபமோ நிஷ்காம கருமத்தின் உறைவிட மாய்விடும்.

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

நிஷ்காம கருமத்தின் உறைவிட


நிஷ்காம கருமத்தின் உறைவிட மாய்விடும். இதில் நிஷ்காம கரும் என்றால் ?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

நிஷ்காம கருமம் என்றால்,காமிய


நிஷ்காம கருமம் என்றால்,காமிய கர்மத்தின் எதிர்பதம்,அதாவது ஒரு செயல் செய்யும் போது அதன் நன்மை மற்றும் தீமையே மனதில் நினைத்து அதன்மூலம் கிடைக்கும் விளைவைக் கொண்டு செயல் செய்ய ஆரம்பித்தால் அது காமிய கர்மம்,இயல்பான சூல்நிலையில் நம் பிரராப்த செயல் நடக்கும் ,,,அந்த செயலில் மனம் செல்லாது. அதே சமையம் அந்த மனது இயல்பான நித்திய சுகத்தில் இருக்கும் புலன் உடன் நன்மை தீமை கணக்கு போடாது இதுதான் நிஷ்காம கர்மம்,

dharshi's படம்

"பலனையும் நாடாது இறையர்ப்


"பலனையும் நாடாது இறையர்ப் பணமாய் நிலைபெறக் கருமம் செய்திடல் வேண்டும்
அதுவே முழுமையாம்"

அந்த கருமம் எப்படி செய்வது என்பதையும் சொல்லணும் தானே


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


dharshi's படம்

"பலனையும் நாடாது இறையர்ப்


"பலனையும் நாடாது இறையர்ப் பணமாய் நிலைபெறக் கருமம் செய்திடல் வேண்டும்
அதுவே முழுமையாம்"

அந்த கருமம் எப்படி செய்வது என்பதையும் சொல்லணும் தானே


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

கர்ம பிராரப்தத்தின் முடிவே


கர்ம பிராரப்தத்தின் முடிவே இந்த தேகவாழ்வின் முடிவாகும்,,

dharshi's படம்

அப்போ மறு பிறப்பு என்று ஒன்று


அப்போ மறு பிறப்பு என்று ஒன்று இல்லை என்கிறீர்களா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

கர்ம பிராரப்தத்தின் முடிவே


கர்ம பிராரப்தத்தின் முடிவே இந்த தேகவாழ்வின் முடிவாகும்,,///இதுக்கும் மறுபிரப்புக்கும் சம்பந்தம்இல்லை,,கர்மம் மூன்று உண்டு1,சஞ்சிதம்.2,பிராராப்த்தம்..3,ஆகமியம்.இதில் ஜென்மம்-பிராராப்தகர்மா,,,இது இந்த ஜென்ம சரீரம் அவ்வளவுதான் பதில்.

dharshi's படம்

1,சஞ்சிதம்.2,பிராராப்த்தம்..3


1,சஞ்சிதம்.2,பிராராப்த்தம்..3,ஆகமியம்

இந்த மூன்றையும் விளக்கமாக சொல்லுங்களேன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

தர்ஷி,,,இதைவிழக்க


தர்ஷி,,,இதைவிழக்க பத்துப்பக்கம் எழுதனும் ,,,இதை ஒரு தலைப்பில்பின்பு எழுதுகிறேன்,,நன்றி

kumaran's படம்

கருமம்...கருமம்...


கருமம்...கருமம்...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


AANMEKAN's படம்

தான் மறந்து இழந்ததுபோலத்


தான் மறந்து இழந்ததுபோலத் தோன்றும் தன் சுபாவ சுகநிலையே மீண்டும் அடையவேண்டும் என்ற ஆவலாக செய்யும் செயல் அனைத்தும் கர்மா,

dharshi's படம்

சுபாவ சுகநிலையை அடைய செய்ய


சுபாவ சுகநிலையை அடைய செய்ய வேண்டிய செயல்கள் எவை ?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

மனதை புலன் உடன் தொடர்பு


மனதை புலன் உடன் தொடர்பு படுத்தாமல் அதை அதன் இயல்புநிலைக்கி வைக்கும் செயல்

VISWAM's படம்

கடமையைச் செய், பலனை


கடமையைச் செய், பலனை எதிர்பாராதே.

selva_red's படம்

கருமகாண் டத்திலே நின்றிடும்


கருமகாண் டத்திலே நின்றிடும் ஜீவனும் கருமத்திற் கேற்பமறு பிறவியை எடுத்திடும்
விளக்கமாக சொல்லுங்களேன்

AANMEKAN's படம்

பஞ்சீகரணத்தைக் கொண்டு


பஞ்சீகரணத்தைக் கொண்டு செய்யும் செயல் கர்மம்,,அதாவது புலனுகர்ச்சியிலே மனதை வைத்து செயல்படும் ஜீவன்,,,அந்த நூகர்ச்சி தீரும் வரை கரமம் செயவோண்டும்,இறக்கநேர்ந்தால் அவ்வினை மீண்டும் தொடரும் அதுமுடியும்வரை,

selva_red's படம்

நன்றி


நன்றி