நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நம் தளத்தில் ஒரு நண்பி தன் நண்பர்கள் எல்லோரிடமும் தன் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்ப கேட்பதாக சிலரிடமிருந்து புகார் வந்திருக்கிறது.
தயவு செய்து அவ்வாறு எவரும் பணம் அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்த குறிப்பிட்ட நபர் யார் என்பது அவருக்கும் அவருடன் பழகும் நண்பர்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அந்த நபர் யார் என கூற விரும்பவில்லை.
இதனால் மற்ற நண்பிகளை யாரும் சந்தேகப்படவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது நண்பர்கள் ஏமாறாமல் இருக்கவும், அந்த நபருக்கும் ஒரு எச்சரிக்கை மட்டுமே. மேற்கொண்டு புகார் வருமாயின் அவரது கணக்கு தடுக்கப்படும். அல்லது இநதிய காவல்துறையிடம் புகார் கையளிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நன்றி
- admin's blog
- Login or register to post comments
- 877 reads
கருத்துகள்
நம்பிக்கையின் மறுபெயர் நட்பு.
நம்பிக்கையின் மறுபெயர் நட்பு. ஆனால் அந்த நம்பிக்கையையும் நட்பையும் சாதகமாக பயன்படுத்தி மோசம் செய்யும் இது போன்ற நபர்களை மன்னிக்க முடியாது. அட்மின் குறிப்பிட்ட பெண் ,தன் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக கூறி என்னிடமிருந்து கூட ஒரு தொகையை பெற்றிருக்கிறார். பிறகுதான் அந்த பெண் ஒரு மோசடி நபர் என்று உணர்ந்துகொண்டேன் ஒருவரின் நட்புணர்வையும் இரக்க உணர்வையும் பயன்படுத்தி மோசடி செய்வதுதான் உலகிலேயே மிகப்பெரிய பாவம் ,குற்றம் ஆகும். இனியாவது அந்த பெண் நேர்மையாக வாழ்வாரா?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
: ( என்னிடமும் ஒருத்தர்
: (
என்னிடமும் ஒருத்தர் கேட்டார்கள்
நானே ஒரு பிச்சைக்காரன். கொடுக்கிறதுக்கு ஒண்ணும் இல்லை. அதனால் இன்னும் ஏமாறலை
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
என்ன வினோத், தப்பித்ததுக்கு
என்ன வினோத், தப்பித்ததுக்கு சந்தோஷப் படுங்கள். அதற்காக பிச்சைக்காரன் என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வதற்கு என்ன இருக்கு?
சாப்பிடுவதற்கு மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது நல்லது அல்லவா?
பணம் கொடுத்தது தவறல்லவா? என் நண்பர் ஒருவரும் இதே போன்ற ஒரு தவறை செய்து விட்டு
இப்பொழுது வருந்திக் கொண்டிருக்கிறார்.தேவையா இது?
நிஜத்தை நிஜமாக ஏற்றுக்கொள்ள
நிஜத்தை நிஜமாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டேன். அதனால் என்னை எப்படி தாழ்த்திக்கொண்டாலும் ஒரு வித்தியாசமும் இப்போதெல்லாம் தெரிவதில்லை. நிஜம் நிஜமாகவே இருக்கிறது எப்போதும்.
அப்புறம் பணம் கொடுக்காததற்கு காரணம் எனக்கு இரக்க குணம் இல்லை என யாரும் நினைக்கக்கூடாது பாருங்க. நாங்கெல்லாம் இரக்கப்படுவதில் அங்க அற்றம். : )
ஏழை நிஜமாக கஷ்டம் என்றால் உணவு கொடுப்பதை விட்டுவிட்டு மீன்பிடிக்க கற்றுக்கொடுக்கலாம்.
தெரிந்தே ஏமாற்றுவர்களுக்கு எப்படி ஏமாற்றுவது என்றுதான் கற்று்ககொடுக்க முடியும்
தண்டனை கொடுக்க எனககு தகுதியில்லையே. மேலும் அதன் விளைவுகளை அவரே அனுபவிக்க விட்டுவிடுவது நல்லது என்பது என் எண்ணம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இந்த உலகில் ஏமாற்றுபவர்கள்
இந்த உலகில் ஏமாற்றுபவர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அவர் பெண் என்பதுதான்.
சரிதான். டேஞ்சரஸ் பெல்லோஸ்
சரிதான். டேஞ்சரஸ் பெல்லோஸ்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
"ஏமாற்றுபவர்கள் இருந்தால்
"ஏமாற்றுபவர்கள் இருந்தால் ஏமாறுபவர்களும் உண்டு"...
கவனித்து...வாசிக்க
" முடிவிலலாத பயணம் நோக்கி செல்கிறேன்.
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்"......
ஆனந்தன்
ada pavame ippadiyum
ada pavame ippadiyum nadakutha ithu varai yarum enaku apdi msg anupala
farveen
enakkum appadi edhuvum
enakkum appadi edhuvum varavillaiye. irunthalum usharaga iruppen ini
பெண்கள் 5 பைசா சொந்தக்காசுல
பெண்கள் 5 பைசா சொந்தக்காசுல செலவழிக்கமாட்டாங்கன்னு அந்த பொண்ணுக்கும் தெரியாதா என்ன?

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஒரு பொண்ணோட மனசு இன்னொரு
ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு புரியும்குறது இதுதானா?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
இதில் ஒரு சிறப்பம்சம்
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்தப்பெண், நம் தளத்தில் எந்தப்பதிவுகளும் போடாது, பிறர் பதிவுகளை படிக்கவும் செய்யாது,அந்தப் பெண்ணின் குறிக்கோள் ,இருப்பவர்களுடன் தனிப்பட்ட முறையில் பழகி பணம் கறப்பது மட்டும்தான். அதனால், மேற்சொன்ன பின்னூட்டங்களை அந்தப்பெண் படித்திருக்குமா என்பது கூட ஐயம்தான்.(அந்தப்பெண்ணின் பெயர்-(சரிகம்பதநிசா)இதில்தான் இருக்கிறது...முடிந்தால் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
அட பேரு போட்டா எங்க மாதிரி
அட பேரு போட்டா எங்க மாதிரி லேட் பிக்கப்பல்லெம் தெரிஞ்சுக்கவமில்ல
அவர் கட்டாயம் போலி பெயரில்
அவர் கட்டாயம் போலி பெயரில் தான் பதிவு செய்திருப்பார். அவர் கணக்கை முடக்கிவிடுங்கள்
















