sriramanandaguruji's படம்

     அண்ட வெளியில் உள்ள கிரகங்கள் ஒவ்வொன்றும் மனித உடலில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. அல்லது கட்டுப்படுத்துகிறது. உதாரணமாகச் சொல்வது என்றால் வியாழன் என்ற குரு கிரகம் நமது மூளையைக் கட்டுப்படுத்துகிறது. சுக்கிரன் மனித உடலில் விந்து உற்பத்தியாவதற்கும், வீணாவதற்கும் காரணமாக இருக்கிறது. சனி நரம்பு மண்டலத்தையும், புதன் சுவாசத்தையும் கட்டுப் படுத்துகிறது. அதே போன்று செவ்வாய் கிரகம் நமது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களையும் எலும்பு தாதுக்களையும் ஆட்சி செய்கிறது.

    ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த ஜாதகருக்கு சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். அப்படிக் குறைவாக இருக்கும் நபர் செவ்வாய் தோஷம் இல்லாத அதாவது சிவப்பு அணுக்கள் சரியாக இருக்கும் நபரோடு இணைந்து குழந்தைகளைப் பெறும் போது பிறக்கும் குழந்தைக்கு உடல் ஆரோக்கியம், சரியாக இராது.

  இதுதான் செவ்வாய் தோஷத்தின் பாதிப்பே தவிர மற்றபடி மணமக்கள் பிரிந்து விடுவார்கள், இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் தவறான நம்பிக்கைகளாகும். கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டும் செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்குத் தோஷம் இல்லாமல் இருந்தும் கூட அவர்கள் பல காலம் நல்லவிதத்தில் இணைபிரியாமல் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

    பொதுவாக லக்னத்திற்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் என்று கருதப்படுகிறது. ஆனால் இது பொதுவான கணக்கே தவிர சரியான கணக்கு அல்ல. செவ்வாய் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று இருந்தாலும் மகர ராசியில் உச்சம் பெற்று இருந்தாலும் கடக ராசியில் நீச்சம் பெற்று இருந்தாலும் செவ்வாய் தோஷம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

     இது தவிர குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களில் ஏதாவது ஒன்று செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து இருந்தாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ அல்லது மேற்குறிப்பிட்ட கிரகங்கள் செவ்வாயைப் பார்த்தலோ செவ்வாய் தோஷம் கண்டிப்பாகக் கிடையாது. அதே நேரம் செவ்வாயின் நட்புக் திரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியவற்றின் ராசிகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்குச் செவ்வாய் எந்த இடத்தில் இருந்தாலும் தோஷம் என்பதே கிடையாது. இந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஆயிரத்தில் ஒருவருக்குத் செவ்வாய் தோஷம் உண்டு. மற்றவர்கள் அதை நினைத்துப் பயப்படுவது வீண் கற்பனையாகும் ரத்த சம்மந்த பட்ட தோஷம் என்பதால் பரிகாரம் செய்வதால் எந்த பயனும் இல்லை..
 

4.66667
Your rating: None Average: 4.7 (3 votes)
http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_03.html

கருத்துகள்

raaamu's படம்

பயனுள்ள தகவல்


பயனுள்ள தகவல்

Thamizh.Friends's படம்

தமிழ் நண்பர்களில் பெருங்குளம்


தமிழ் நண்பர்களில் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள்:

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

சரி, உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]

[1] நீங்கள் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[2] நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ, 8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[4] 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.

இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.

பரிகாரம் தேவைப்படுபவர்களுக்கு: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்

--

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.
http://kuppuastro.blogspot.com/


தமிழ் நண்பர்கள்