இவர்களின் கருத்துக்களையும், பேச்சுக்களையும் மிக கவனமாக கவனித்து பார்க்கு போதும் ஒரு தெளிவான உண்மை எனக்கு தென்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள முஸ்லீம்களிலும் சிலர் உணர்ச்சி பூர்வமாக செயல்பட கூடியவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் ஒளரங்கசீப்பை பற்றி ஒருவர் குறையாக சொன்னால் அந்த மன்னனின் நல்ல இயல்புகளையும் அவனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகளையும் எடுத்து சொல்லி கருத்துக்களை பதிய வேண்டும். அதை விட்டுவிட்டு அவனை நல்லவன் என்று நான் நினைக்கிறேன். மற்றவர்கள் எப்படி குறை கூறலாம் என்பது முழுக்க முழுக்க கருத்து சுகந்திரத்திற்கு எதிரானதாகும். ஒரு தனிப்பட்ட மனிதனின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலத்தில் கொண்டு வந்து விவாதம் செய்வது நாகரீக சமூகத்தில் நடைபெற கூடாத செயலாகும். அதே தனிமனிதன் பொது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்வனாக இருந்தால் அவனது ஒவ்வொரு செயலும் அது அகச்செயலாக இருந்தாலும் புறசெயலாக இருந்தாலும் நாலுபேர் விமர்சிப்பதை யாரும் குறை கூற முடியாது.
ஒளரங்கசீப் கூர்-ஆனின் கட்டளைபடி ஐந்து வேளை தொழுதான். மது மற்றும் போதை பொருட்களை கண்களால் கூட தொடமறுத்தான். தனது இன்ப வெறிக்காக எந்த பெண்ணையும் அவன் பலாத்காரம் செய்தது கிடையாது. அரசனாக இருந்தாலும் ஆடம்பர பொருட்கள் எதையும் உபயோகப்படுத்துவதை அவன் விரும்பவில்லை. பளபளவென்ற பட்டாடையை கூட அவன் அணிந்தது இல்லை.அரண்மையின் மேல் மாடத்தில் நின்று தினசரி காலை வேளைகளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து சொல்லும் ஆண்டான் அடிமை பழக்கத்தையும் கட்டோடு ஒழித்தான்.
அரசியல் என்று வந்துவிட்டாலே அதில் சூதும், சதிகளும் நிறைந்திருக்கும் என்று நமக்கு தெரியும். இக்கால அரசியல் போலவே தான் அக்காலத்திலும் பல தகிடுதித்தங்கள் நடந்தது உண்டு அதனால் தான் எந்த அரசியல்வாதியும் தன்னை உத்தமன் என்று பகிரங்கமாக சொன்னால் கூட உள்ளுக்குள் தன் கூற்றை தானே நம்புவதில்லை. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை கூட ஒப்பந்தம் உறுதிமொழி என்று வந்துவிட்டால் அதை மீறுவதற்கு கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால் ஒளரங்கசீப்பின் அரசியல் வாழ்க்கையில் ஒப்பந்தம் என்பதெல்லாம் எதிராளியை தாக்குவதற்கு எடுத்து கொள்ளும் அவகாசங்கள் தான்.
ஆனால் இறைவழி நடப்பது தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என ஊரெல்லாம் விளம்பரபடுத்தி கொண்ட ஒளரங்க சீப் அந்த ஒப்பந்தத்தை இரண்டே ஆண்டுகளில் மீறினான் தனது சொந்த சகோதரனையே அன்பு என்ற நயவஞ்சக வலையை விரித்து கொலை செய்தான். முராதுவை கொன்றது போலவே தனது மற்ற இரு சகோதர்களையும் கொலை செய்த ஒளரங்க சீப்பின் கருணை மனோபாவத்திற்கு இன்னம் ஒரு அழகான எடுத்துகாட்டு சரித்திரத்தில் அழியாமல் இருக்கிறது.
மாமன்னர் ஒளரங்க சீப் தனது பதவிக்கு போட்டியாக சுலைமான் வந்துவிட கூடாது என்ற நல்ல நோக்கத்தில் இருபத்தைந்து வயது கூட பூர்த்தியாகாத இளவரசருக்கு மரண தண்டனை விதித்தார். கொல்வதென்றால் உடனடியாக கொன்று விடுங்கள். சித்திரவதை செய்து கொல்ல வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார். ஆகட்டும் என்று அரசரும் தலையசைத்து கொண்டார். தனது அண்ணன் மகனை எப்படி கொன்றார். தெரியுமா? பௌஸ்தா என்ற போதை பானத்தில் அபின் கலந்து கொடுத்து ஒவ்வொரு அங்கங்களையும் சிறிது சிறிதாக வெட்டி நாற்பது நாளுக்கு மேல் சித்ரவதை செய்து வலியே இல்லாமல் (?) துடிதுடிக்க கொன்றார் இதுதான் ஒளரங்க சீப்பின் கருணை மனதின் உண்மை லட்சணம்.
அரசனாயிருக்கட்டும். சாதாரண குடிமகனாக இருக்கட்டும் மனித நேயம் மனித பண்பு என்பவைகள் சிறிது கூட இல்லாத ஒருவனை மனிதன் என்ற கணக்கில் சேர்த்து கொள்வதே பெரிய தவறு.
ஒளரங்க சீப்பை உண்மையான முஸ்லீம் என்று சில சாதாரண மனிதர்களும் சில அறிஞர்களும் கருதுகிறார்கள். அப்படி அவனை உயர்வாக எண்ணுவதற்கு அவர்களுக்கு சகல உரிமையும் இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் திரு கூர்-ஆன் இரண்டாவது அத்தியாயம். எண்பத்தி மூணாவது சூரா உங்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள், அனாதைகள், மிஸ்கீன் என்ற வறியவர்கள் ஆகியோருடன் நற்பண்போடு நடந்து கொள்ளுங்கள், மனிதரிடம் நல்லவற்றை பேசுங்கள் என்று சொல்கிறது. கூர்-ஆன் வழிலிருந்து சற்றும் தவறாதவன் என்று சொல்லப்படும் ஒளரங்கசீப் கூர்-ஆனின் இந்த கட்டளைக்கு கொடுத்த மரியாதை உலகறிந்தது. ஆம் பெற்ற தந்தையையே சிறையில் அடைத்து துன்பபடுத்தி மனதால் துடிக்கவிட்டு மவுனமாக அழ வைத்து அதை ரசித்த வண்ணம் கூர்-ஆன் படித்தான்.
ஷாஜகான் ஒளரங்கசீப்பின் தந்தை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் அவன் மெகலாய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி எல்லாதரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்ட நல்ல நிர்வாகி, சகல கலைகளிலும் ஆர்வமுடைய மேதை. அப்படிப்பட்ட ஒரு சக்கரவர்த்தியை சிறையிலடைத்த ஒளரங்கசீப் எண்ணிலடங்காத கொடுமைகள் செய்தான். ஆக்ரா கோட்டைக்குள் இருந்த ஷாஜகானின் சிறைசாலைக்கு யமுனா நதியிலிருந்து குடிநீர் விநியேகம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்திவிட்டான். கோடைகாலத்து கடும் வெய்யிலை தாங்க முடியாத முதிவரான ஷாஜகான் கோட்டைக்குள் கிடைத்த உப்பு தண்ணிரையே குடிநீராக பயன்படுததினார். இதை பற்றி ஷாஜகான் கைப்பட எழுதிய ஒரு கடித ஆதாரம் இன்னும் இருக்கிறது.
சிம்மாசனத்தை அடைய கொடுமைகள் செய்தது ஒளரங்கசீப் மட்டும் தானா? மற்ற மன்னர்கள் யாரும் கொடுமைகளே செய்தது இல்லையா? என்ற கேள்வி பலருக்கு எழும். ஒளரங்க சீப்பிற்கு முன்பு இருந்த அல்லது மொகலாய வம்சத்தாருக்கு முன்னோடிகளான தைமூர்கள் கையாளாத சதி திட்டஙகளா? அல்லது கொடுமைகளா? அவர்கள் செய்ததைதான் இவனும் செய்தான், என்று சிலர் கேட்க கூடும். அண்ணனை கொன்றது. தகப்பனை சிறையில் அடைத்தது அவர்களின் சொந்த குடும்ப விஷயம். அது எக்கேடாவது கெட்டு ஒழியட்டும். மக்கள் ஒளரங்க சீப்பால் அடைந்த நன்மை என்ன? அப்படி எதாவது இருக்கிறதா? என்று பூத கண்ணாடி போட்டு தேடி பார்த்தாலும் கூட ஒரு கூழாங்கல் அளவு கூட நன்மை என்று எதுவும் கிடைக்கவில்லை.
அதற்காக சிலருக்கு பதவிகளை கொடுத்து கவர்ந்து இழுத்தான். செல்வத்தையும் வாரி கொடுத்தான். பணத்திற்கும், பதவிக்கும் மயங்காதவர்களை சிறையிலும் தள்ளி கொடுமை படுத்தினான். சிறை கொடுமையும் தாங்கிகொண்டு மதமாற மறுத்தவர்களை ஆசை தீர கொலை செய்தான். எத்தனை பேர்களை தான் கொலை செய்வது. கொலை செய்வதற்கென்றே வேலைக்கு ஆள் வைத்து சம்பளம் கொடுத்து பணத்தை வீணடிக்க வேண்டி இருக்கிறதே என்று வருத்தப்பட்ட ஒளரங்கசீப் நாட்டு சிக்கனம் கருதி கில்ஜி வம்சத்தாரும் அடிமை வம்சத்தாரும் இந்துக்கள் மேல் போட்ட ஜிஸியா என்ற வரி விதிப்பை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தான்.
அதாவது இந்து மக்கள் தான் பிறந்த சொந்த நாட்டிலேயே தன் விருப்பபடி வழிபாடு நடத்த வருடம் தோறும் அரசாங்கத்திற்கு வரிகட்ட வேண்டும். அப்படி வரிகட்ட முடியாத யாருக்கும் இந்துவாக வாழ உரிமையில்லை. ஒன்று அவன் இஸ்லாமியனாக மாறியாக வேண்டும். அல்லது மரணத்தை ஏற்று கொள்ளவேண்டும்.
இஸ்லாமிய கொள்கைப்படி சங்கீதம் நாட்டியம் என்பவைகள் சாத்தானின் செயல்களாம் சிற்பம், ஒவியம் என்பது கூடவே கூடதாம். இதற்காக அந்த பைத்தியகாரன் என்ன செய்தான் தெரியுமா? நாட்டிலுள்ள இசைவானர்களையும், நாட்டியகாரர்களையும் நாட்டைவிட்டே ஒடும்படி கட்டளையிட்டான். மறுத்துவர்களை கும்பலாக ஒரே இடத்தில் கூட்டி நெருப்பு வைத்து கொளுத்தி சாகடித்தான். இவன் காலத்தில் எழுதப்பட்ட ஒரே ஒரு கலை பொக்கிஷம் பதாவா-இ-ஆலம்கீ என்ற நூல்தான். இந்த நூல் எதைப்பற்றி பேசுகிறது என்று தெரிந்து கொண்டால் ஒளரங்கசீப் மேதமைக்கு, கலைசேவைக்கு ஆயிரம் பாரத ரத்னா விருதுகள் வழங்கலாம். சரி அதில் அப்படி என்னதான் எழுதப்பட்டிருக்கிறது என்று யாரும் மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம். மக்கள் நடந்து கொள்ள வேண்டிய இஸ்லாமிய சட்டங்கள் என்பது தான் அந்த புத்தகத்திலுள்ள சரக்கு.
இந்து ஆலயங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகள், கலை கலாச்சார விழாக்கள் எல்லாம் தடை செய்ப்பட்டன. சாமி ஊர்வலம் கூட வர கூடாது. ஏன் என்றால் அதில் மேளதாளம் இருக்கிறதாம். இந்த சட்டங்கள் எல்லாம் இந்துக்களுக்கு மட்டும் தான். அவன் அரசவையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாரசீக நாட்டிலிருந்தும், பாக்தாத் நகரிலிருந்தும் ஏராளமான இசைவானர்களையும் நாட்டிய தாரகைகளையும் வரவழைத்து அந்தப்புறங்களில் கண்டு ரசித்தனர் குதிரைலாயத்தில் கிடக்கும் கருப்பு குதிரையின் பிடரி மயிர் உதிர்வதை கூட கவனிக்க தவறாத ஒளரங்க சீப்பின் கண்களும் காதுகளும் இதை அறியவில்லையா? இதை எப்படி நம்ப?
இங்கு நான் குறிப்பிட்டது எதுவும் ஆதாரமற்ற குற்றாசட்டுகள் அல்ல. டாக்கா பல்கலைகழக முன்னாள் துனைவேந்தர் பேராசியர் கே.சி. மஹும்தார், கல்கத்தா பல்கலைகழக முன்னாள் வரலாற்று பேராசியர் ஹச் .சி. ராய் சௌத்ரி, பாட்னா கல்லூரியின் முன்னாள் வரலாற்று பேராசியர் கே. தத்தா ஆகியோர் எழுதிய இந்தியாவின் சிறப்பு வரலாறு என்ற நூலில் உள்ளது. இந்த நூலை தமிழ் வடிவம் படுத்தியது கோவை அரசினர் கலைகல்லூரியின் முன்னாள் வரலாற்று பேராசியர் எ. உஸ்மான் ஷெரிப் தமிழ்நாடு அரசால் 1965-ம் வருடம் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் நூலகங்களில் தேடி படித்து கொள்ளுங்கள்.
- sriramanandaguruji's blog
- Login or register to post comments
- 366 reads
கருத்துகள்
என்ன சொல்வதென்று
என்ன சொல்வதென்று தெரியவில்லை..
பழையதையெல்லாம் கிளறுவதில் யாரு்க்கு என்ன லாபம் எனத்தெரியவில்லை. தன்பக்கம் குற்றம் இருந்தாலும் அதை மற்றவர் கூறினால் ஒத்துக்கொள்ளாதது நம் அனைவரது மனித பண்பு. விதிவிலக்கு ஒரு சிலரே..
அங்ஙனமிருக்க யாரோ ஒருவருக்காக இதையெல்லாம் எழுதுவது வீண்வேலைமட்டுமல்ல, வலைப் பதிவுலகில் வெறி கொண்டு எழுதி வரும் பல பதிவர்களில் ஒருவராக நம்மை அது சித்தரித்து விடும் அபாயம் உள்ளது.
இவ்வாறான பதிவுகள் என்றுமே ஓயப்போவதில்லை. பதிலுக்கு வேறு பதிவுகள் வருமே ஒழிய வேறு எந்த பிரோஜனமும் இல்லை. இவ்வாறான பதிவுகள் ஏற்கெனவே இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வரிசையில் நம் பதிவுகள் சேராமல் தனித்து தெரிய வேண்டும் எனில் தயவு செய்து இவ்வாறான் பதிவுகளை குறைத்தல் நலம்.
இது மதரீதியான பதிவுகளுக்கு மட்டுமல்ல, அரசியல் பதிவுகளுக்கும் மிக பொருந்தும். நம்மை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக இவ்வாறான ஒரு போதை நமக்குள் ஏற்பட்டு விடும். அவ்வாறு போதையேறிய அரசியல் பதிவாளர்களும் மத துவேஷர்களும் நிரம்பிய பதிவுலகில் தனித்து தெரியும் நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
தயவு செய்து இதை தனிப்பட்ட அறிவுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்பதிவிற்கு வந்த ஒரு கருத்தாகவே எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...















